ஒரு பேண்டு சட்டை கூட இல்லாம லண்டனிலேயே இருப்பவரை சிவகங்கையில் பார்க்க முடியுமா?!

karthicidambaram - 2026

சிதம்பரம் மகன் கார்த்தியை மக்கள் பார்க்கவே முடியாது என மானாமதுரையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது நடிகை சரஸ்வதி கூறினார்.

அமமுக. வேட்பாளர் மாரியப்பன் கென்னடியை ஆதரித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி பேசியபோது…

சிவகங்கை தொகுதியைச் சேர்ந்த சாதாரண சராசரி மக்கள் ப.சிதம்பரத்தையே பார்க்க முடியாத போது அவரது மகன் கார்த்தி லண்டனிலேயே இருப்பவர், அங்கே சொத்து சேர்ப்பவர், அவர் இங்கு காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார், அவர் வெற்றி பெற்றால் மக்கள் எப்படி அவரை சந்திக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, போட்டுக்கொள்ள தனக்கு ஒரு பேண்டு சட்டை கூட சிவகங்கையில் இல்லை என்று கூறி! கார்த்தி சிதம்பரம் அதிர்ச்சி அளித்திருந்தார்.

செட்டி நாட்டு இளவரசர் என்று காங்கிரஸ் தொண்டர்களால் அழைக்கப்படும், சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தான் அணிந்து கொள்ள ஒரு பேண்ட்- சட்டை கூட சிவகங்கையில் இல்லை என்று மாணவர்கள் மத்தியில் கூறி அதிரவைத்தார்.

சென்னையில் கல்லூரி மாணவிகளோடு ராகுல்காந்தி உரையாடி மக்கள் கவனத்தை கவர யோசித்தது போல் தானும் உரையாடி மக்கள் கவனத்தை ஈர்க்கும் முயற்சியுடன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து மாணவ மாணவிகளை அழைத்து வந்து கலந்துரையாடினார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை சுட்டிக் காட்டிய ஒரு மாணவி, நீங்கள் வெற்றி பெற்றால் பெண்கள் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கார்த்தி, இதையெல்லாம் சட்டம் போட்டுத் திருத்த முடியாது பெற்றோர் நினைத்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்றார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு பேண்ட் சட்டையில் வந்திருக்க வேண்டும் என்று கூறிய கார்த்தி சிதம்பரம், சிவகங்கையில் தனக்கு பேண்ட் சட்டை ஏதும் இல்லை என்றும், எல்லாம் சென்னையில் இருப்பதால் வேட்டி சட்டையுடன் சந்திக்க வந்திருப்பதாகவும் கூறினார்.

இப்போதே இப்படி ..! ஜெயித்தால் தொகுதி பக்கம் வருவாரா? இல்லை சென்னையிலேயே இருப்பாரா என்ற கேள்வியுடன் மாணவர்கள் வெளியேறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories