பெத்தவனே சின்னப் பொண்ணுன்னுகூட பாக்காம சீரழிக்க… வெகுண்ட தாயின் புகாரால்… இப்போ ‘உள்ளே’..!

girl attack image - 2026

திருச்சி அருகே உள்ள மணப்பாறை பகுதியில், பெத்தவனே தனது பள்ளிக்கூடம் படிக்கும் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய, அதை அறிந்து வெகுண்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரில் ஒரு குடும்பமே இப்போது போலீஸின் விசாரணைக்குள் இருக்கிறது.

திருச்சி அருகே மணப்பாறையைச் சேர்ந்த புதுமணியாரம்பட்டியை சேர்ந்த 14 வயதுச் சிறுமி அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கட்டடத் தொழில் செய்து வரும் அவரின் தந்தை பெயர் ரவிச்சந்திரன். இவருக்கு குடிப்பழக்கம் உண்டாம்.

சம்பவத்தன்று வழக்கம் போல் தன் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்துள்ளார் ரவிச்சந்திரன்! அப்போது தனியே இருந்த மகளிடம் ரவிச்சந்திரன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அந்தச் சிறுமி, கூச்சல் இட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன், சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அழுதுகொண்டே தனது தாயிடம் கூறியுள்ளார் அந்தச் சிறுமி. இதைக் கேட்டு அதிர்ந்த அவர், மகளை தனது தந்தை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். பின்னர், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீஸில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், கணவன் ரவிசந்திரன் மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்! அதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி அவரது தாய் மற்றும் சகோதரிகளை வைத்து மிரட்டுகிறார் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

இதை அடுத்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ரவிசந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ரவிசந்திரனின் தாய், தந்தை மற்றும் சகோதரிகள் மீது கொலைமிரட்டல் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories