2 ஆண்டு சிறை தண்டனையாம் .! ஜாக்கிரதை

Published:

சமூக ஊடகங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2016 எவ்விதமான தேர்தல் கருத்து கணிப்புக்களை14-05-2016ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் மணிக்கு மேல் வெளியிட்டாலோ அல்லது பகிர்வு செய்தாலோ 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
 
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு 14-05-2016ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரங்கள் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் நாளை 14-05-2016ம் தேதிமாலை 6 முதல், ஓட்டுப்பதிவு நாளான 16-05-2016ம்தேதி மாலை வரை கருத்துக் கணிப்புக்கள் நடத்தவும், வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஊடகங்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களுக்கும் இந்த தடை பொருந்தும் என எச்சரிக்கை விக்கப்பட்டுள்ளது.
 
பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் கருத்துக் கணிப்புக்களை வெளியிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசியல் கட்சிகள் சார்பில் டிவி, இணையதளம், சினிமா அரங்குகள் ஆகியவற்றில் செய்யப்பட்டு வரும் விளம்பரங்களுக்கு 48 நேர தடைவிதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் பிரசாரத்திற்கான அழைத்து வரப்பட்ட தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத நபர்கள் நாளை மாலைக்கு பிறகு தொகுதிகளை விட்டு வெளியேறி விட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்து
உத்தரவிடப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img