அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. ! எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி!

koundamani hbd - 2026

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா… இந்த வசனத்தை உச்சரிக்காத தமிழனே இல்லை எனும் அளவுக்கு ரொம்பவே பாப்புலர் ஆனது இது! இந்த வசனத்தின் சொந்தக்காரருக்கு இன்று வயது 80 ஆகிறது.

அட.. ஆமா..! அம்ம கவுண்டமணிக்கு 80 வயசா?! ஆச்சரியமாத்தான் இருகும். சுப்பிரமணியம் கருப்பையா என்ற கவுண்டமணி பிறந்தது இதே மே மாதம் 25ம் நாள் 1939ம் வருடத்துலதான் கொங்கு நாட்டின் கண்ணம்பாளையத்தில் பிறந்தவர். கருப்பையா, அன்னம் தம்பதியின்

கவுண்டமணி தனி ஆவர்த்தனமாக நகைச்சுவை காட்டியதை விட, செந்திலுடன் இணைந்து செய்த காமெடிகளே இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப் பட்டு வருகின்றன. இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை ஜோடிகளான லாரல், ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப் படுவதுண்டு!

கவுண்டமணியின் நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகம் ஒன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்தார். அவ்வளவுதான்.. அவர் பெயரும் கவுண்டமணி ஆனது. 26ஆம் வயதில் திரைப்படங்களில் தலைகாட்டத் தொடங்கினார்.

gowndamani - 2026தொடக்க காலங்களில் தனியாகவே நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்த பின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிக்க வைத்த பெருமை உண்டு. கொங்குத் தமிழ் பேச்சு, நக்கல், வெறுப்பு கலந்த நையாண்டி உரையாடல்கள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்திழுத்தவை.

இவர்களின் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழ ஜோக்குதான்! இன்றளவும் அந்த இன்னொன்னைப் போல் வேறு ஒன்று வரவில்லை என்று சொல்லலாம். அதற்கு அடுத்தது, சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா… என்பது! இன்றளவும் அரசியல்வாதிகளின் சாதாரண சூட்சுமங்களை ரசிகனுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

750 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். 10 படங்களில் ஹீரோ வேசமும் கட்டிவிட்டார். வில்லன், குணசித்திர பாத்திரங்கள் என திரைப் படங்களில் தலைகாட்டிவிட்ட கவுண்டமணி அண்மைக் காலமாக அமைதியாகவே இருந்து வருகிறார். 1939 – 2019ல் அகவை எண்பதைக் கடந்துள்ள கவுண்டமணிக்கு நம் “தமிழ் தினசரி”யின் பிறந்த நாள் வாழ்த்துகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories