spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்லாட்ஜ்ல ரூம் போட அடையாள அட்டை கேட்டா... மோடியா காரணம்! பெண் மீது புகார்!

லாட்ஜ்ல ரூம் போட அடையாள அட்டை கேட்டா… மோடியா காரணம்! பெண் மீது புகார்!

- Advertisement -

வேளாங்கண்ணியில் லாட்ஜில் ரூம் எடுத்து தங்குவதற்கு பாதுகாப்பு காரணம் கருதி லாட்ஜ் நிர்வாகம் அடையாள அட்டை கேட்டதற்காக வேளாங்கண்ணியில் வைத்து சித்ரா ரேவதி (CHITRAREVATHY) என்பவர் பாரத பிரதமர் மோடியை தரக்குறைவாக ஒருமையில் பேசி இந்திய அரசுக்கு எதிராக மக்களிடையே அவதூறான செய்திகளை டிக்டாக் செயலி மூலம் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசு வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் காவல்துறையில் ஆன்லைன் மூலம் புகார் செய்துள்ளார்!

வேளாங்கண்ணிக்கு வந்த தாங்கள் தங்குவதற்கு அறை கேட்டபோது, அடையாள அட்டை கேட்டதாகவும், கடந்த வருடம் வந்த போது அவ்வாறெல்லாம் கேட்கவில்லை என்றும், இரண்டு நாள் தானே வந்திருக்க.. அதுக்குள்ள என்ன புதுசு புதுசா ரூல்ஸ் போடுற என்றும் பிரதமரை ஒருமையில் திட்டியும் சித்ராரேவதி என்ற பெண், டிக்டேக் செயலியில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இலங்கையில் கிறிஸ்துவ சர்ச்சுகளைக் குறிவைத்து இஸ்லாமிய மத பயங்கரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர் என்பதும், அதனை அடுத்து இந்தியாவிலும் வேளாங்கண்ணி உள்ளிட்ட சர்ச்சுகளில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டது என்பதும் செய்தி.

தொடர்ந்து, இவ்வாறு தலங்களுக்கு சுற்றுலா வருபவர்கள் தங்குவதற்கு எந்த இடத்திலும் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை கேட்டுப் பெறுவதும், வந்து தங்குபவர் அடையாளங்களைப் பதிவு செய்வதும் பாதுகாப்பு நடைமுறை என்பதை மறைத்து, வேண்டுமென்றே பிரதமர் மோடி குறித்து அவதூறு பதிவு செய்வதாகவும் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இந்நிலையில், இந்தப் பெண் மீது புகார் மனு பதிவு செய்துள்ளார் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன்.

அந்தப் பெண் வைரலாக்கிய வீடியோ பதிவு…

[videopress naWsyp38]

3 COMMENTS

  1. What a cheap character she is! It’s good that a police complaint has been registered against the upstart! She must be arrested and the case must be taken to the Court and we want to see that such characters are punished! Don’t let her off the hook!

  2. பிரதமரை திட்டுபவர்களை உள்ளே போடவேண்டும் என்று சட்டம் வரவேண்டும். அதென்னவோ தெரியவில்லை. மோடி அவர்களை ஒழித்து விடவேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளாகவே பலரும் ஒரு கோஷ்டியாகவே அலைந்திருக்கிறார்கள். எவ்வளவோ செய்திருக்கிறார். என்னவோ போறாத காலம். ரபேல் ஊழல், நீட் தேர்வு குழறு படிகள், ஜிஎஸ்டி, பணமதிப்பீடு நடவடிக்கை, சோக்சி மல்லையா கடனை அடைக்காமல் ஓடிப்போனது என்று சில காரியங்கள் நடந்து விட்டன. நாக்கில் நரம்பில்லாமல் பேசிய அந்தப் பெண்ணுக்கு sattapadi தக்க தண்டனை தரப்பட வேண்டும்.

  3. This shows her brought up by her parents, normally all parents will teach their children to respect elders and others, some fake religious leaders and some third rated political parties with help of unethical TV channels had meticulously planned these types of cheap and vulgar anti campaign against Modi ji, for unknown reasons

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe