அமித் ஷாவுடன் நேற்று ஆளுநர்; இன்று தமிழக அமைச்சர்கள்… திடீர் சந்திப்பு!

amitsha thangamani velumani - 2026

நேற்று தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியதை அடுத்து, இன்று தமிழக அமைச்சர்கள் இருவர் சந்தித்துப் பேசினர்.

தில்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.2,168 கோடி நிதி ஒதுக்குதல், கோவை விமான நிலைய விரிவாக்கம், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் விடுபட்டவர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுவை அமித் ஷாவிடம் அளித்தனர்.

முன்னதாக தில்லி சென்ற தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் முக்கிய மின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். பின்னர் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த வேலுமணி, கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், சிவகங்கை மாவட்டத்துக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், குடிநீர் திட்டங்களை புனரமைத்தல், மழை நீர் சேகரிப்புத் திட்டங்கள், வறட்சி நிவாரணம் ஆகியவற்றுக்கு ரூ. 5,398 கோடி நிதி வழங்க கோரிக்கை விடுத்தார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

முன்னதாக, தமிழக அரசியல் சூழல், தமிழக அரசின் செயல்பாடுகள், அதிமுக.,வில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் இவை குறித்து தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்துடன் அமித் ஷா உரையாடியதாகக் கூறப் படுகிறது. அப்போது, துணை வேந்தர் நியமனங்களில் கடைபிடிக்கப் பட்ட வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற தன்மை ஆகியவை குறித்து அமித் ஷா பாராட்டியதாகவும், அதிமுக., அரசின் ஊழல்கள் தொடர்பான நடவடிக்கைகளை வெளிப்படையாக எதிர்கொள்ளலாம் என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories