December 6, 2025, 4:15 AM
24.9 C
Chennai

முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது!

12 Aug 05 High court - 2025

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானது என்று உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புக் கொண்டதை அடுத்து, இத்தகைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது உயர் நீதிமன்றம்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி ஒப்புக் கொண்டது.  கேள்வித்தாள் குளறுபடி, வெளிப்படைத்தன்மை இன்மை ஆகிய காரணங்களால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரி விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் பங்கேற்ற குரூப் 1 தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 9 ஆயிரத்து 50 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தேர்வானவர்களின் பெயர், பாலினம், பிரிவு என எவ்வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், கட் – ஆஃப் மதிப்பெண்ணும் வெளியிடப்படாததால் தேர்வு வெளிப்படைத்தன்மை இன்றி நடத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும், குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 18 கேள்விகள் தவறானவை என்றும், அவற்றை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று டி.என்.பி.எஸ்.சியிடம் தாம் கோரியதாகவும், ஆனால் அதனை ஏற்காமல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அந்த மனுவில் முறையிட்டுள்ளார்.

எனவே தேர்வு முடிவுகளை ரத்து செய்து, மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

விக்னேஷ் தாக்கல் செய்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை  விசாரித்த நீதிபதி பார்த்திபன், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கேள்வித்தாளில் அரசியலமைப்பு பாடப்பிரிவில் கேட்கப்பட்டிருந்த கேள்வி ஒன்றை சுட்டிக்காட்டி, இந்தக் கேள்விக்கு எனக்கே பதில் தெரியவில்லை என்றார்.

மேலும், இந்த ஒரு கேள்வியே மனுதாரரின் குற்றச் சாட்டுக்கு போதுமானதாக உள்ளது என்றார்.

அப்போது டி.என்.பி.எஸ்.சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என்று  வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், டிஎன்பிஎஸ்சியின் இந்த ஒப்புதல் விளக்கத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரூப் -1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது எனக் கூறினார்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என்று தெரிவித்த நீதிபதி, ஜூன் 17 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories