சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல ரயில்களின் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் ரயில்கள் இயக்கப்படும் புதிய அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூர் – குருவாயூர் (எண்16127) எக்ஸ்பிரஸ் தினசரி காலை 8.15 மணிக்கு பதிலாக 8.25 மணிக்கு புறப்படும்.
தினசரி இரவு 7.50 மணிக்கு புறப்படும் எழும்பூர் -(16723) அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 8.10 மணிக்கும்,
தினசரி இரவு 8.10 மணிக்கு புறப்படும் எழும்பூர் – நெல்லை (12631) எக்ஸ்பிரஸ் ரெயில் இனி 7.50 மணிக்கு புறப்படும்.
தினசரி இரவு 10.40 மணிக்கு புறப்படும் எழும்பூர்-தஞ்சாவூர் (16865) உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.55 மணிக்கும்,
தினசரி இரவு 11 மணிக்கு புறப்படும் எழும்பூர்-சேலம் (22153) எக்ஸ்பிரஸ் ரெயில் 10.45 மணிக்கும்,
தினசரி மதியம் 3.30 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு-கச்சிகுடா (17652) எக்ஸ்பிரஸ் ரெயில் 3.20 மணிக்கும் புறப்படும்.
புதிய அட்டவணை வரும் ஜுலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் பல ரெயில்களின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டு உள்ளன.
இந்த தகவல்கள் அனைத்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.