அதிக பொறியாளர்களை உருவாக்ககூடிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மாநில அறிவியல் தொழில்நுட்ப கழக துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
பொள்ளாச்சி அருகே சிறுகளந்தையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் காலகட்டங்களில் அதிக செயற்கைகோள்களை உருவாக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளதாகவும், மூன்று ஆண்டுகளில் விண்வெளிக்கு இந்தியர்கள் போய் வர வாய்ப்பு உருவாகலாம் என்றும் தெரிவித்தார்.
இந்தியர்கள் விரைவில் விண்வெளிக்கு சென்று வருவார்கள்: மயில்சாமி அண்ணாதுரை தகவல்
Popular Categories



