குடும்பத்துடன் வந்து… அத்தி வரதரை தரிசித்த விஜயகாந்த்!

vijayakanth athivarathar - 2026

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் இன்று காஞ்சிபுரத்துக்கு வந்து அத்திவரதரை தரிசித்தார்.

40 வருடங்களுக்கு ஒருமுறைதான் அனந்த சரஸ் குளத்தில் இருந்து வெளியில் வந்து, அன்பர்களுக்கு தரிசனம் தருகிறார் என்பதால், அத்திவரதர் உத்ஸவம் சிறப்பாகக் கருதப் பட்டு, காஞ்சி நகரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பெருமளவிலான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காஞ்சிக்கு வருகின்றனர்.

பொதுமக்கள் மட்டுமல்லாது, விஐபி.,க்கள் அரசியல்வாதிகள் என பலரும் காஞ்சிக்கு படையெடுத்து வருவதால், நகரில் மக்கள் நெரிசல் அதிகரித்துள்ளது.

இத்தகைய சிறப்பு பெற்ற அத்திவரதரை தரிசிப்பதற்காக, விஜயகாந்த், தனது குடும்பத்தினருடன் இன்று காலை காஞ்சிபுரத்துக்கு வந்திருந்தார்.

காலை 9.30 மணி அளவில் பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், சுதீஷின் மனைவி என விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்தார்.

விஜயகாந்தை கைத்தாங்கலாக கோயிலுக்கு உள்ளே அழைத்து வந்தனர். விஜயகாந்த் சற்றே நின்று தள்ளாடியபடி வந்தார். அவரை வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து, செல்போனில் வீடியோ போட்டோ என எடுத்தனர். கூடியிருந்த பக்தர்களைப் பார்த்து உற்ஸாகம் அடைந்த விஜயகாந்த், அவகளை நோக்கி புன்முறுவலுடன் சிரித்து அன்பை வெளிப்படுத்தினார்.

சில நேரம் அன்பர்களைப் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். அத்திவரதர் முன்னர் விஜயகாந்துக்காக சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் படத்தின் பெயர்ப் பலகையும் அத்திவரதர் சந்நிதியில் வைத்து ஆசி பெறப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories