விண்ணப்பத்தில் ஜாதி குறிப்பிட கட்டாயப் படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

சென்னை:
‘விண்ணப்பத்தில், ஜாதி பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றால், அவர்களை கட்டாயப்படுத்த முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் இது குறித்து குறிப்பிட்டதாவது:

சமூக நீதிக்கு முன்னோடி மாநிலமான தமிழகத்தில், 1973 ஜூலை, 2ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், ‘பள்ளிகளில், மாணவர் சேர்க்கையின் போது, ஜாதி, மதத்தை குறிப்பிட விரும் பாதவர்களிடம், அதை தெரிவிக்கும்படி வற்புறுத்த வேண்டாம்; மாற்றுச் சான்றிதழ்களில் ஜாதி, மதங்களை குறிப்பிட வேண்டாம்’ என, கூறப்பட்டுள்ளது.

இதன்பின், 2000 ஜூலை, 31ம் தேதி, இந்த அரசாணையை அமல்படுத்துவது சம்பந்தமாக, மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இருந்தும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கையின் போது, ஜாதி, மதத்தை குறிப்பிடும்படிநிர்பந்திக்கின்றனர்.இடஒதுக்கீடு சலுகை களை பெற விரும்புவோரிடம் மட்டும், ஜாதிச் சான்றிதழ்களை பெறலாம். மற்றவர்களிடம் இந்த விவரங்களை பெற அவசிய மில்லை. எனவே,’பள்ளி மாற்றுச் சான்றிதழ் களில், ஜாதி, மதத்தை குறிப்பிடக் கூடாது’ என, உத்தரவிட வேண்டும். இது தொடர்பான அர சாணையை அமல் படுத்த உத்தரவிட வேண்டும்.

– இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம் மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி மகாதேவன் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:

ஜாதியற்ற சமூகம் வர வேண்டும் என்றநோக்கத்துக்காக, 2, 000 ஜூலை யில், பள்ளிக்கல்வித் துறை அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையை பின்பற்ற வேண்டிய தேவை யை, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்து கிறார்.மனுதாரர் வழக்கறிஞர் வாதத்தில், நாங்கள் உடன்படுகிறோம். இந்த அரசாணை குறித்து விரிவான விளம்பரம் செய்ய வேண்டும். அப்போது தான், ஜாதி, மதம் பற்றி தெரிவிக்க விரும் பாதவர்களை, கட்டாயப்படுத்த மாட்டார்கள்.

மாற்றுச் சான்றிதழை பொறுத்தவரை, ‘ஜாதி பெயரை தெரிவிக்கக் கூடாது’ என, நாங்கள் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஏனென்றால், சிலர் அதை தெரிவிக்க விரும்பலாம். இருந்தாலும், யாராவது தங்கள் ஜாதி பெயரை தெரிவிக்க விரும்பவில்லை என்றால், அதை தெரிவிக்க வேண்டும் எனக்கூற தேவையில்லை.

இவ்வாறு, ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories