February 23, 2026, 4:30 AM
25.9 C
Chennai

ஏமாற்றும் குற்றால அருவி! பாலருவிக்குப் படையெடுக்கும் பயணிகள்!

courtallam july14 - 2026

குற்றால அருவிகள் ஏமாற்றி வருவதால், கேரள மாநிலத்தில் உள்ள பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், திருக்குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்து வருகிறது. மெயின் அருவியில் சிறிதளவே தண்ணீர் விழுகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் முழுவதுமாக நின்று போனது. இதனால், பெண்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாறையை ஒட்டி விழும் சிறிதளவு நீரில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து தலை காட்டிச் செல்கின்றனர்.

இந்நிலையில், செங்கோட்டையை அடுத்து,  சுமார் 16 கி.மீ., தொலைவில் கேரள மாநிலம் ஆரியங்காவு வனப் பகுதியில் உள்ள பாலருவியில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் பெருமளவு படையெடுத்து செல்கின்றனர்.

பாலருவியில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. அதே நேரம், பாதுகாப்பு குறைவு என்பதால் பயணியருக்கு அச்சம் உள்ளது. குற்றால அருவிகளைப் போல் பாதுகாப்பாக நின்று குளிக்க இயலாமல், தடாகத்தினுள் இறங்கி, பாறையை ஒட்டி விழும் அருவி நீரில் குளிக்கலாம். இது பெண்களுக்கு மிகவும் சிரமம் என்பதால், பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

[su_gmap width=”700″ height=”500″ address=”Palaruvi”]

மேலும், பாலருவியில் செல்ல காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரைதான் அனுமதி என்பதும், ஒருவருக்கு உள்ளே செல்ல ரூ.50 கட்டணம் என்பதும் பாலருவிக்கு பயணிகள் செல்வதில் சில தயக்கங்களை ஏற்படுத்துகிறது. முழுவதும் கேரள வனப்பகுதிக்குள் சென்று குளிக்க வேண்டியிருப்பதால், அவர்களின் அனுமதி தேவைப்படுகிறது.

இருப்பினும், பாலருவியில் சென்று குளிப்பதில் ஆண்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் பாலருவிக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.

பாலருவியில் குளித்து மகிழும் பயணிகள்… காணொளி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories