ஏமாற்றும் குற்றால அருவி! பாலருவிக்குப் படையெடுக்கும் பயணிகள்!

courtallam july14 - 2026

குற்றால அருவிகள் ஏமாற்றி வருவதால், கேரள மாநிலத்தில் உள்ள பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், திருக்குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்து வருகிறது. மெயின் அருவியில் சிறிதளவே தண்ணீர் விழுகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் முழுவதுமாக நின்று போனது. இதனால், பெண்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாறையை ஒட்டி விழும் சிறிதளவு நீரில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து தலை காட்டிச் செல்கின்றனர்.

இந்நிலையில், செங்கோட்டையை அடுத்து,  சுமார் 16 கி.மீ., தொலைவில் கேரள மாநிலம் ஆரியங்காவு வனப் பகுதியில் உள்ள பாலருவியில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் பெருமளவு படையெடுத்து செல்கின்றனர்.

பாலருவியில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. அதே நேரம், பாதுகாப்பு குறைவு என்பதால் பயணியருக்கு அச்சம் உள்ளது. குற்றால அருவிகளைப் போல் பாதுகாப்பாக நின்று குளிக்க இயலாமல், தடாகத்தினுள் இறங்கி, பாறையை ஒட்டி விழும் அருவி நீரில் குளிக்கலாம். இது பெண்களுக்கு மிகவும் சிரமம் என்பதால், பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

[su_gmap width=”700″ height=”500″ address=”Palaruvi”]

மேலும், பாலருவியில் செல்ல காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரைதான் அனுமதி என்பதும், ஒருவருக்கு உள்ளே செல்ல ரூ.50 கட்டணம் என்பதும் பாலருவிக்கு பயணிகள் செல்வதில் சில தயக்கங்களை ஏற்படுத்துகிறது. முழுவதும் கேரள வனப்பகுதிக்குள் சென்று குளிக்க வேண்டியிருப்பதால், அவர்களின் அனுமதி தேவைப்படுகிறது.

இருப்பினும், பாலருவியில் சென்று குளிப்பதில் ஆண்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் பாலருவிக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.

பாலருவியில் குளித்து மகிழும் பயணிகள்… காணொளி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories