அண்ணா நகர் டவர் பூங்காவில் இன்று இசை நிகழ்ச்சி

anna nagar - 2026

நமது பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் இன்று அண்ணா நகர் டவர் பூங்காவில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு சமூக, பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல், கலை ஆகியவற்றில் பாரம்பரியத்தைக் கொண்ட நகரங்களை சர்வதேச ஒத்துழைப்புடன் வலுப்படுத்தும் நோக்கில், கடந்த 2004-இல் படைப்பாற்றல் திறன் கொண்ட நகரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பில் தற்போது 180 நகரங்கள் உள்ளன. இதில், இந்தியாவில் வாராணசி, ஜெய்ப்பூர் நகரங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சென்னை உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “இசைத் துறையில் சென்னையின் பங்களிப்பு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையை பாரம்பரிய இசை நகரமாக யுனெஸ்கோ தேர்ந்தெடுத்தது. இதுவரை உலக அளவில் 31 நகரங்களை இசை நகரங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பாரம்பரிய இசையை இளையதலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையிலும், நமது கலைகளை சர்வதேச அளவில் அறியப்படுத்தும் வகையிலும் சென்னையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலுள்ள பூங்காக்கள், பொது இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணி அளவில் அண்ணா நகர் டவர் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories