கூட்டணியா? ஆளூர் ஷாநவாஸா? முடிவெடுக்கும் இடியாப்பச் சிக்கலில்… திருமாவளவன்!

thirumavalavan stalin - 2026

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் திமுக., தலைமைக்கும் இப்போது மனவேறுபாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளை கேட்டுப் பெற்று, இரண்டிலும் வென்றுவிட்டது. இனி திமுக., தலைமையோ, கட்சியோ அதற்கு தேவைப்படாத ஒன்றுதான்!

திருமணம் முடிந்து தேனிலவு நடந்தபின்னர், குடும்பத்துக்குள் எழும் அடிதடி ரகளை போல் இப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் திமுக.,வுக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளது.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும் ஒரு முதன்மைக் காரணமாக பேசப் படுவது, வி.சி.க.,வின் துணை பொதுச் செயலர் ஆளூர் ஷாநவாஸ், அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திமுகவை வெளிப்படையாக விமர்சிக்கும் வகையில் கருத்துகளை வலுவாக வெளிப்படுத்தியிருந்தார்..

aloor shanawaz - 2026மத்திய அரசு கொண்டு வந்த என்.ஐ.ஏ.வுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதாவின் போது, திமுக., ஆதரவாக செயல்பட்டது. இந்த விவகாரத்தில் திமுகவின் செயல்பாடு ஏற்கத்தக்கதல்ல என்றும், அதுபற்றி விமர்சிக்காமல் கள்ள மவுனம் காக்க முடியாது என்றும் கூறினார் ஆளூர் ஷாநவாஸ்.

ALSO READ:  வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

மேலும், என்.ஐ.ஏ. குறித்த மசோதாவுக்கு திமுக ஆதரவளித்ததால் அந்தக் கட்சி காலத்திடம் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறினார் ஆளூர் ஷாநவாஸ்.

இது திமுக.,வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக.,வே, இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாட்டில்தான் தேர்தலை சந்தித்தது. பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் என்.ஐ.ஏ., விவகாரமும் இஸ்லாமிய வெகுஜன ஆதரவு நிலைப்பாடும் வேறுவேறு என்று திமுக., கருதியதால்தான் என்.ஐ.ஏ., விவகாரத்தில் ஆதரவு அளித்தது என்று கட்சியினர் கூறி வரும் நிலையில், திமுக., மீது குற்றம் சொல்லி, இஸ்லாமிய வெறுப்புக் கருத்துணர்வில் திமுக.,வை சிக்க வைக்கும் வகையில் ஆளூர் ஷாநவாஸ் பேசுகிறார் என்ற கோபம் திமுக., தலைமையில் எதிரொலித்தது.

thirumavalavan shanavaz - 2026எனவே, யாருடைய கருத்தை ஷா நவாஸ் தெரிவித்திருக்கிறார் என வி.சி.க. தலைமையிடம் திமுக கேள்வி எழுப்பியதாகக் கூறப் படுகிறது. ஷாநவாஸின் பேச்சு திமுகவுக்கு எதிராக இஸ்லாமியர்களைத் தூண்டி விடும் வகையில் அமைந்ததால், திருமாவளவன் மீது ஸ்டாலினுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் யாருக்கு என்ன உதவி செய்தாலும் நன்றி என்பது சிறிதும் இல்லை என்ற வகையில் திமுக., வட்டாரத்தில் எதிரொலிக்கிறது.

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

amitsha thirumavalavan - 2026ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் இத்தனை நாட்களாக திமுக.,வையே சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த அற்புதம் அம்மாள் இப்போது விசிக.,வின் திருமாவளவனை அழைத்துக் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது சூழல் என்ற கருத்தும் அறிவாலய வட்டாரத்தை யோசிக்க செய்துள்ளது.

ஏற்கெனவே விருதுநகரில் கட்சியினர் கூட்டத்தில், மதிமுக., தேர்தல் செலவுக்கு விசிக.,வுக்கு பெட்டி கொடுத்தது என்று வைகோ கூறிய விவகாரத்தில் பேஸ்புக்கில் வன்னியரசு கூறிய கருத்தில் கூட்டணிக்குள் பெரும் புயல் கிளம்பியது. ஆயினும், தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டு, அப்போது சமாதானப் போனார்கள் வைகோ., மற்றும் திருமா., குழுவினர். அப்போதும் வைகோ கேட்டது.. வன்னியரசு யார் சொல்லி பேசுகிறார் என்பதுதான்! இப்போது அதே கேள்வியை ஷாநவாஸை வைத்து ஸ்டாலின் கேட்டு வருகிறார்.

இந்நிலையில், ஆளூர் ஷாநவாஸா கூட்டணியா என்ற நிலையில் தவித்து வருகிறார் திருமாவளவன் என்கிறார்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில்!

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories