December 5, 2025, 12:03 PM
26.9 C
Chennai

சபரிமலை நிறைபுத்தரிசி பூஜைக்கு… அச்சங்கோவிலில் இருந்து சென்ற நெற்கதிர்கள்!

sabarimalai niraiputharisi3 - 2025

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அச்சன் கோவில் ஐய்யப்பன் கோவில் நிலத்தில் இருந்து நெற்கதிர் அறுவடை செய்து, செவ்வாய்க்கிழமை இன்று காலை நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் கருப்பசாமி கோயில், ஆரியங்காவு ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் அதனை வரவேற்று சபரிமலைக்கு அனுப்பி வைத்தனர். திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர், ஐயப்ப சேவா சங்கத்தினர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக அச்சன் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெற்கதிர்களுக்கு மக்கள் வழி நெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.

sabarimalai niraiputharisi1 - 2025சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து ஐயப்பஸ்வாமிக்கு படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

பூஜிக்கப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப் படுகிறது. பிரசாத நெற்கதிர்களை வீடுகளில் வைத்திருந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நிறைபுத்தரிசி பூஜை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடைபெறுகிறது. இதற்காக கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு, மாலை நடைதிறந்து தீபம் ஏற்றப் பட்டு, வேறு பூஜைகள் எதுவும் இல்லாமல் நடை இரவு 10 மணிக்கு சாத்தப்படும்.

sabarimalai niraiputharisi2 - 2025நெற்கதிர்கள் பிரசாதம் நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனமும், அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து மேல்சாந்தி நெற்கதிர்களை தலையில் சுமந்து, கோயிலை வலம் வந்து கோயிலுக்குள் கொண்டு செல்வார். தந்திரி சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த நெற்கதிர்கள், செங்கோட்டை அருகில் உள்ள கேரளம் கொல்லம் மாவட்டம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து இன்று காலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தலைமையில் தேவசம்போர்டு அதிகாரிகள், ஆலய மேல்சாந்திகள் ஆகியோர் நெற்கதிர்களை அறுவடை செய்தனர்.

sabarimalai niraiputharisi4 - 2025நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கோட்டைவாசல் கருப்பசாமி கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு, தொடர்ந்து ஆரியங்காவு ஐயப்பன் கோவிலுக்கு நெற்கதிர்கள் எடுத்துச் செல்லப்பட்டு, பூஜைகள் செய்யப் பட்டன. பின்னர் அவை சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கு வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories