இதுதான் இந்தோனேஷியா! பாடம் படிக்குமா இந்தியா!?

Published:

indonesia rupees - 2026

இந்தியாவில் நாம் புழங்கும் மதச்சார்பு வார்த்தையை குப்பைத் தொட்டியில் கிடாசிவிட்டு, பெரியாரிச முகமூடியை அடுப்புக்குள் எறிந்துவிட்டு இதைப் பார்க்க வேண்டும். இந்தோனேஷிய நாட்டின் ரூபாய்… அதிக மதிப்புள்ள இதன் ஓரத்தில் கருடன் பறக்கிறார்… விநாயகர் சிரிக்கிறார்…

இதுதான் இந்தோனேஷியா. நாடு இசுலாமிய மயமாகியிருந்தாலும், கலாசாரத்தால், கடாரம் வென்ற ராஜேந்திர சோழனின் தமிழர் கலாசாரத்தை பரம்பரை பரம்பரையாக வழிவழியாகக் கடைப்பிடித்து, தமிழர்களின் வாழ்வியல் நெறிகளில் இரண்டறக் கலந்திருந்த தெய்வசிந்தனைகளின் அடையாளமாய்த் திகழ்ந்த விநாயகர், கருடன் ஆகியவற்றை ரூபாய் நோட்டுகளில் பதிந்து வைத்துள்ளது.

இன்று இத்தகைய கருத்தைத்தான் சுப்பிரமணிய சுவாமியும் பதிவு செய்துள்ளார். இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தைப் போல் லட்சுமியின் படத்தை அச்சிட வேண்டும் என்று!

indonesia rupeesq - 2026

லட்சுமியின் படத்தை பட்டாசுகளில் அச்சிட்டு, அவமானத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சிவகாசி பட்டாசுக் காரர்களை எவரும் கண்டிக்கவில்லை! ஆனால், லட்சுமியின் படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும் என்று கருத்து தெரிவித்த சு.சுவாமியின் கருத்தை கண்டிக்கும் சிலருக்கு இந்தோனேஷியா வழிகாட்டுகிறது.

லட்சுமி குபேர பூஜை என்பது, சமயம் கடந்து, இந்தியர்களால் கலாசார ரீதியாக கடைப்பிடிக்கப் படுவது. இதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.!

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img