December 6, 2025, 1:07 PM
29 C
Chennai

‘என் அப்பா’ என்ற தலைப்பில் மாணவன் எழுதிய உருக்கமான கட்டுரை! படித்து… உதவ ஓடிவந்த அமைச்சர்!

my appa article1 - 2025

மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தில் பள்ளி நடத்திய கட்டுரைப் போட்டியில் நான்காம் வகுப்பு மாணவன் தன் வீட்டு நிலைமை பற்றி கள்ளம் இல்லாமல் எழுதினான். அதனைப் படித்த ஆசிரியர் மிகுந்த வருத்தம் அடைந்து அதனை தன் நண்பருடன் பகிர்ந்து கொண்டார்.

அந்த நண்பர் அந்த கட்டுரையை சோசியல் மீடியாவில் பதிவிடவே அது வைரலாக மாறி மகாராஷ்டிரா சமுதாய நீதித்துறை அமைச்சரைச் சென்றடைந்தது. உடனே செயலில் இறங்கிய அமைச்சர் அந்த மாணவனுக்கு பொருளாதார உதவி செய்யும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். அதோடு அந்த மாணவனின் கல்விச் செலவனைத்தையும் தான் ஏற்பதாக வாக்களித்தார்.

நடந்தது என்ன?

student written article - 2025

பீட் மாவட்டம் வால்கவாடி கிராமம் ஜில்லாபரிஷத் பள்ளி, “என் அப்பா” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தியது. அதில் பங்குகொண்ட நான்காம் வகுப்பு மாணவன் மங்கேஷ் வால்கே தன் வீட்டின் நிலைமையை உருக்கமாக எழுதினான்.

” என் பெயர் மங்கேஷ் பரமேஸ்வர். என் அப்பா மிகுந்த அன்பானவர். என் அப்பா பெயர் பரமேஸ்வர் வால்கே. நான் நன்கு படித்து பெரிய ஆபீசராக வரவேண்டும் என்று எப்போதும் சொல்வார். ஆனால் டிசம்பர் 18, 2019 அன்று டிபி நோய் காரணமாக மரணமடைந்தார். அப்போது என் அம்மா ரொம்ப அழுதார்கள். நானும் மிகவும் அழுதேன்.

எங்கள் வீட்டுக்கு நிறைய பேர் உறவினர்கள் வந்தார்கள். ஆனால் யாரும் எங்களுக்கு உதவ முன் வரவில்லை. என் அம்மா ஊனமுற்றவர். அதனால் வீட்டு வேலை எல்லாம் நானே செய்கிறேன். அப்பாவைப் பார்க்க வேண்டும் போல் உள்ளது. அப்பா விரைவில் திரும்பி வாருங்கள்! அம்மாவுக்கும் எனக்கும் இரவில் தனியாக இருக்க பயமாக இருக்கிறது” என்று எழுதியிருந்தான்.

student written article - 2025

அதனை படித்து ஆசிரியர் கண்ணீரை அடக்க இயலாமல் தன் நண்பரிடம் அந்த கட்டுரையை பகிர்ந்து கொண்டார். சிறுவனின் வேதனை மிகுந்த மன நிலையை உணர்ந்த நண்பர் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார்.

maharashtra minister - 2025

ஊனமுற்ற தாய்க்கு பென்ஷன் 600 ரூபாய் வருகிறது. சிறு தோட்டத்தில் தாயும் மகனும் வேலை செய்கின்றனர். தற்போது மகாராஷ்டிரா அமைச்சர் ‘தனஞ்சய் முண்டே’ இந்த செய்தியை அறிந்ததன் மூலம் சிறுவனுக்கு உதவி கிடைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories