போக்குவரத்து தொழிலாளர்க்கு வரங்களை அள்ளி வீசிய தெலங்கானா முதல்வர்!

Published:

kcr meet - 2026

ஹைதராபாத்: தெலங்காணா ஆர் டி சி தொழிலாளர்களுக்கு முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வரங்களை அள்ளி வீசியுள்ளார்.

ஆர்டிசி தொழிலாளர்களின் பதவி ஓய்வு வயதை 60 க்கு உயர்த்தினார். 52 நாட்கள் வேலை நிறுத்த போராட்ட காலத்திற்குக் கூட சம்பளம் கொடுக்கப்படும் என்றார். செப்டம்பர் மாத சம்பளம் திங்களன்று தருவோம் என்றார்.

52 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய ஆர்டிசி தொழிலாளர்களை நிபந்தனையின்றி வேலையில் சேர்த்துக் கொண்டதோடு ஞாயிறு இன்று மதியம் அவர்களோடு சேர்ந்து விருந்து உண்டார். பின் அவர்களோடு சேர்ந்து ஆர்டிசி நிர்வாகத்தின் பிரச்னைகளைப் பற்றி விவாதித்தார்.

பிரகதி பவனில் நடந்த கூட்டத்தில் ஆர்டிசி நிர்வாகத்தில் லாபம் காட்டினால் சிங்கரேணி போல் போனஸ் தருவதாக தெரிவித்தார்.

பெண் ஊழியர்களின் பிரச்னையை தீர்க்க முயற்சி எடுப்போம் என்றார். இரவு 8 மணிக்கே பெண் ஊழியர்களுக்கு வேலை முடிவதுபோல் பணி அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அரசு ஊழியர்களை போலவே பிரசவ விடுப்பு அளிப்பதற்கு அங்கீகாரம் தெரிவித்தார். அதேபோல் தொழிலாளர்களின் பெற்றோர்களுக்கு மருத்துவ உதவி செய்ய உத்தரவிடுவதாக கூறினார்.

ஆர்டிசி பிரச்சினைகள் மற்றும் சூழ்நிலை பற்றி அரசு தரப்பில் முதல்வர் கேசிஆரே பவர் பாயின்ட் பிரசெண்டேஷன் அளித்ததாக தெரிகிறது. யூனியனின் பக்கம் செல்ல வேண்டாம் என்று அவர்களை முதல்வர் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு டிப்போவில் இருந்தும் ஐந்து பேர் வீதம் 90 டிப்போக்களில் இருந்து 750 பேர் தொழிலாளர்கள் 150 பேர் அதிகாரிகளோடு சிஎம் கேசிஆர் பிரகதி பவனில் உரையாடினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img