பாசத்தோடு பெற்று வளர்த்த பெண்ணை காமுகர்களான மனித மிருகங்களுக்கு பலி கொடுத்துவிட்டு ஆற்றாது வருந்தும் அந்தப் பெற்றோர் தங்கள் பக்கத்து இழப்பை இன்னும் முழுமையாக ஜீரணித்துக் கொள்ள இயலாமல் கண்ணீர் உகுக்கின்றனர்.
மகள் பட்ட துன்பத்தை நினைத்து நினைத்து நொந்து போகின்றனர். ஆனால் ஆறுதல் கூறுவதாகக் கூறிக் கொண்டு பல தலைவர்கள் வருகையால் அவர்கள் மேலும் மன வேதனைக்கு ஆளாகிறார்கள்.
மரணித்த தம் பெண்ணை யாரும் திரும்ப உயிரோடு பிழைக்கச் செய்யப் போவதில்லை. தயவு செய்து விசாரிக்க யாரும் வரவேண்டாம் என்று பிரியங்காவின் பெற்றோர்… அரசியல் தலைவர்கள், போலீசார், மீடியா பிரதிநிதிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
இரண்டு நாட்களாக பல தலைவர்கள் பிரியங்காவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.
எங்களுக்கு உங்கள் அனுதாபம் தேவையில்லை என்று கூறி உள் பக்கமாக கேட்டை பூட்டு போட்டுவிட்டார்கள். தம் மகளுக்கு நேர்ந்த கொடூரத்துக்கு சரியான நியாயம் கிடைத்தால் போதும் என்றும் யாருடைய அனுதாபமும் தேவையில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
எங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். சரியான நேரத்தில் போலீசார் எங்களுக்கு உதவியிருந்தால் எங்கள் மகள் உயிர் பிழைத்திருப்பாள் என்றனர். அப்போது உதவாத போலீசார் இப்போது தன் வீட்டைச் சுற்றி அலைவது எதற்காக? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விஷயம் குறித்து பிரதமரும் முதல்வரும் வாய் திறக்காதது ஏன் என்று கேட்டனர். குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்கச் சொல்லி போராடியவர்கள் மேல் தடியடி நடத்தப் பட்டதையும் கண்டித்தனர்.