வீட்டில் பூஜிக்க… விநாயகர் உருவம் எந்த அளவில் இருக்க வேண்டும்?!

white black pillaiyar
white black pillaiyar

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஆன்மீக கேள்வி பதில்:

கேள்வி: வீட்டில் ஏற்பாடு செய்து பூஜை செய்யும் பிள்ளையார் உருவம் எந்த அளவில் இருக்க வேண்டும்? அந்த சிலையை நீரில் கரைக்காமல் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமா?

பதில்: வரசித்தி விநாயக விரதமான பிள்ளையார் சதுர்த்திக்கு பிரதிமை முக்கியமாக களிமண்ணால் செய்ததாக இருக்க வேண்டும். விரத கல்பத்தில் மண்ணாலோ வெள்ளியாலோ தங்கத்தாலோ செய்யலாம் என்று எழுதியுள்ளது. உலோகங்களால் செய்யப்படும் விக்ரஹங்களை நீரில் நிமஜ்ஞனம் செய்வதில்லை. அவற்றை மீண்டும் பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

ஆனால் மண்ணால் செய்த பொம்மையை பூஜை ஆனவுடன் நிமஜ்ஞனம் செய்தே தீர வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

பிள்ளையார் சதுர்த்தியன்று செய்யும் சிலையை மட்டும் மண்ணால் தான் செய்ய வேண்டும். இதனை ‘பார்த்திவ மூர்த்தி’ என்பார்கள். சிவபூஜையில் கூட ‘பார்த்திவ’ விங்கார்ச்சனை செய்வதுண்டு. அந்த லிங்கத்தை பூஜை ஆனபின்னர் நிமஜ்ஞனம் செய்து விடுவர்.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

அதேபோல்
கணபதியையும் நீரில் கரையக்கூடிய மண்ணால் தயாரிக்க வேண்டும். பூமி தத்துவத்தால் செய்த பிள்ளையாரை மீண்டும் ஜல தத்துவத்தில் கரைக்கவேண்டும்.

யோகத்தின்படி கூட ஸ்தூல தத்துவத்தை சூட்சும தத்துவத்தில் லீனம் செய்து கொண்டே சென்றால் தான் பரதத்துவம் கிடைக்கும் என்பார்கள்.

வீட்டில் பூஜிக்கும் விக்ரஹங்கள் பெரியவையாக இருக்கக்கூடாது. விக்ரஹத்தின் அளவு பெரிதாக ஆனால் அதற்கான சாத்தியும் அதிகமாகும். அதோடு வீட்டுக்குள்ள கட்டுப்பாடுகளை அனுசரித்து விக்ரஹங்களை வழிபடவேண்டும்.

வீடுகளில் வழிபடும் உலோக விக்ரஹம் உள்ளங்கை அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மண் பிள்ளையார் சற்று பெரியதாக இருக்கலாமே தவிர பெரிய உருவங்களை வீடுகளில் பூஜிக்கக் கூடாது. வீடுகளில் பூஜிக்கும் லிங்கம் அங்குஷ்ட பிரமாணம் அதாவது கைப்பிடி அளவுதான் இருக்க வேண்டும்.

தெலுங்கில்: பிரம்மஶ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories