December 5, 2025, 1:30 PM
26.9 C
Chennai

நவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்!

kanaka-durga
kanaka-durga

நவராத்திரி ஸ்பெஷல்…  ஆன்மீக கேள்வி பதில்! 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி  ரகுநாதன்

கேள்வி: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன?

பதில்: சாதாரணமாக இறைவழிபாட்டிற்கு என்ன நியமங்கள் இருக்க வேண்டுமோ அவை அம்பிகையின் வழிபாட்டிற்கும் தேவை. முக்கியமாக தெய்வ வழிபாட்டிற்கு தேவையானது சதாசாரம். நல்ல நடத்தை இருப்பவரே பூஜை செய்ய அருகதை உடையவர். 

பரம்பரையாக குடும்ப சம்பிரதாயப்படி எந்த நல்ல ஆசாரங்கள் கூறப்பட்டனவோ அவற்றை கடைப்பிடிக்க வேண்டும். லலிதா சஹஸ்ரநாமத்தில் ‘சதாசார ப்ரவர்த்திகா’ என்று படிக்கிறோம்.

பிரம்ம முகூர்த்தத்தில் விழித்தெழுந்து, குளித்து, சந்தியாவந்தனம் போன்ற அனுஷ்டானங்கள், நித்திய, நைமித்திக செயல்களைப் புரிவது, தேவ, பித்ரு ஆராதனைகள் போன்றவற்றை செய்பவருக்கே அம்பிகையை வழிபட தகுதி உண்டு.

பித்ரு  தேவதையின் வழிபாடுகளைச் செய்யாதவர்களும்  பாரம்பரியமாக வரக்கூடிய வழிபாடுகளை செய்யாதவர்களும்  அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமாக மாட்டார்கள். அது மட்டுமன்று. நல்ல குணங்கள் இருப்பது முக்கியமான தகுதி. 
லலிதா சகஸ்ரநாமத்தில் ‘மைத்ர்யாதி வாசனாலப்யா’  என்கிறோம். மைத்ரி, முதித, கருணை,  உபேக்ஷை  என்ற நான்கு குணங்கள் இருக்க வேண்டும்.

அதாவது நம்மோடு சமமானவர்களோடு நட்பு, நம்மைவிட உயர்ந்தவர்களைப் பார்த்து மகிழ்ச்சி, நம்மை விட தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் மீது கருணை, நம்மை வெறுப்பவர் களிடம் உபேக்ஷை அதாவது உதாசீனம் இருக்க வேண்டும். அவ்வளவுதானே தவிர யார் மீதும் விபரீத எண்ணங்கள் கொண்டிருக்கக் கூடாது.  

அதோடு ‘தர்மாதாரா தனாத்யக்ஷா’ என்று கூறியுள்ளதுபோல்,  தர்மத்தோடு கூடிய வாழ்க்கை வாழவேண்டும். ‘பாவனா கம்யா’ அம்பிகையை நினைத்து வாழ வேண்டும். இவை நியமங்கள்.

பிரத்தியேகமாக சக்தி ஆராதனை செய்பவர்களுக்கு பெண்களிடம் காமப் பார்வை இருக்கக்கூடாது. பெண்களை ஜகன்மாதா என்ற எண்ணத்தோடு,  ஜகன்மாதாவின் களையோடு விளங்குகிறாள் என்று பார்வையோடு நோக்க வேண்டும். இது அம்பிகை வழிபாட்டில் மிக முக்கியமான நியமம்.

அதுமட்டுமின்றி பெண்களை எந்த விதமாகவும் துன்புறுத்தக் கூடாது. தாழ்வாக பார்க்கக்கூடாது.

‘சுவாசின்யர்ச்சன ப்ரீதா’ என்று கூறியுள்ளது போல் ‘குமாரி’ யாக இருக்கும் போதிலிருந்து முதுமை நிலை வரை பெண்களை பல வடிவங்களில் இந்த ஒன்பது நாட்களும் வழிபடுகிறோம். 

பெண்களிடமே அம்பிகையின் களை இருக்கும் என்பதால் பெண்ணை ஜகன்மாதா என்ற எண்ணத்தோடு பார்ப்பதென்பது முக்கியமான ‘சாக்தேய’ நியமம்.

அதனால் அம்பிகை உபாசகர்கள் ஸ்த்ரீயை மாத்ரு திருஷ்டியோடு பார்க்க வேண்டுமென்பது பிரதானமான நியமம். இந்த நியமங்களைக் கடைபிடித்து அம்பிகையை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories