சில நொடிகளில்.. இலை வடாம்!

ilai vadam
ilai vadam

இலை வடாம்

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 200 கிராம்,
பச்சரிசி – 2 டேபிள்ஸ்பூன்,
ஓமம் – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
சதுரமாக நறுக்கிய வாழையிலைத் துண்டுகள் – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வடாம் செய்வதற்கு முதல் நாளே இட்லி அரிசியையும் பச்சரிசியையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து மாவை வெளியில் வைத்துவிடவும். ஓமம், ஒரு டீஸ்பூன் எண்ணெய், பெருங்காயத்தூளை மாவில் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு வாழையிலையின் பின்புறம் மாவை ஒரு கரண்டியால் ஊற்றிப் பரவலாகத் தேய்த்துக்கொள்ளவும். வாணலியில் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன் அதன்மேல் ஸ்டீமர் தட்டை (ரைஸ் குக்கரில் இருக்கும் ஸ்டீமர் தட்டு) வைத்து அதன் மேல் மாவு எழுதிய இலையை வைத்து மூடி ஆவியில் வேகவைக்கவும். அடுத்த இலையைத் தயாரிப்பதற்குள் முதலில் வைத்த இலை மாவு வெந்துவிடும். சிறிது ஆறியதும் எளிதாக இலையிலிருந்து உரித்து எடுத்துவிடலாம். இதே முறையில் இலையை மாற்றி மாற்றி எழுதி வேகவைத்து எடுக்கலாம். ஒரு பாதி மாவை இதுபோல காரமில்லாத இலை வடாமாகத் தயாரித்துவிட்டு, மீதமிருக்கும் மாவில் மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து இதே முறையில் இலை வடாம் தயாரிக்கலாம்.

குறிப்பு: இந்த இலை வடாமுடன் இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துச் சாப்பிடலாம். வெயிலில் காயவைத்து எண்ணெயில் பொரித்தோ அல்லது தீயில் வாட்டியோ சாப்பிடலாம். பத்தியச் சாப்பாட்டில் இந்த இலை வடாம் கட்டாயம் இடம்பெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories