அதிசய பலன் தரும் நெல்லிக்காய் அரிஷ்டம்!

Published:

Gooseberry misfortune
Gooseberry misfortune

நெல்லிக்காய் அரிஷ்டம்
தேவையானவை:
நெல்லிக்காய் – அரை கிலோ, பனைவெல்லம் – அரை கிலோ, மண்பானை – ஒன்று (சுத்தமானது).

செய்முறை:
பனைவெல்லத்தைப் பொடி செய்யவும். ஈரம் இல்லாத மண்பானையில் ஒரு கை வெல்லம், ஒரு கை நெல்லிக்காய் என மாற்றி மாற்றிப் போட்டு, கடைசியாக மேல் பூச்சாக வெல்லம் போட்டு, சுத்தமான வெள்ளைத் துணியால் பானையை மூடி, வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும். 40-45 நாட்களுக்குப் பிறகு துணியில் கொட்டி நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி உபயோகப்படுத்தலாம். கண்ணாடி பாட்டில் அல்லது காற்றுப்புகாத டப்பாவில் வைத்து தினமும் சாப்பிடலாம்.
இது மிகவும் சத்துமிக்கது. பெரியவர்கள் 2, 3 துண்டுகளும், குழந்தைகள் ஒரு துண்டும் சாப்பிடலாம். பசியின்மை, மூட்டுவலி நீங்கும். தினமும் சிறிது எடுத்துக் கொண்டால், வாயுத்தொல்லை ஏற்படுவதை தடுக்கும்.

Related articles

Recent articles

spot_img