February 22, 2026, 1:25 PM
29.6 C
Chennai

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தேங்காய் பால் புளி சாதம்!

Coconut milk Tamarind rice - 2026

தேங்காய் பால் புளி சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
மிளகாய் வற்றல் – 4
புளி – பெரிய எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் – அரை கப்
கடலைப்பருப்பு – அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெந்தயம் – அரை தேக்கரண்டி
கல் உப்பு – அரை மேசைக்கரண்டி+அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
தக்காளி – 2
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் ஊற வைக்கவும். அரிசியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸியில் அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து தண்ணீர் பால் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் அரைத்த தேங்காயுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கலக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, கரைத்து புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுக்கவும். இந்த புளி கரைசலை முக்கால் கப் தண்ணீர் தேங்காய் பாலுடன் கலந்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் வெந்தயத்தை போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாக வறுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், ஊற வைத்த கடலைப்பருப்பை போட்டு ஒரு முறை வதக்கி விடவும்.

பின்னர் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

அதில் நறுக்கின தக்காளியை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதில் புளிக்கரைசலுடன் கலந்து வைத்திருக்கும் தண்ணீர் பாலை ஊற்றவும்.

பிறகு உப்பு போட்டு கிளறி மூடி வைக்கவும். 3 நிமிடம் கழித்து கொதித்து நுரையுடன் பொங்கி வரும் போது ஒரு முறை கிளறி விட்டு அரிசியை களைந்து போடவும்.

பின்னர் ஒரு நிமிடம் கழித்து அதனுள் பொடி செய்து வைத்திருக்கும் வறுத்த வெந்தயத்தை போட்டு, வெய்ட் போடாமல் மூடி வைக்கவும்.

அதன் பிறகு 2 நிமிடம் கழித்து திறந்து கிளறி விடவும். மீண்டும் 2 நிமிடம் கொதித்ததும் எடுத்து வைத்திருக்கும் திக்கான தேங்காய் பால் ஊற்றவும்.

ஒரு முறை கிளறி விட்டு குக்கரை மூடி வெய்ட் போடவும். 3 விசில்(12 நிமிடம்) வந்ததும் இறக்கி வைத்து விடவும். நீராவி முழுவதும் போனதும் திறக்கவும்.

விரைவில் தயாரிக்கும் புளி தேங்காய்பால் சாதம் தயார். நாம் புளிக்கரைசலை தயாரித்து பிறகு தான் சாதத்தில் போட்டு கிளறுவோம் ஆனால் உடனே தயார் செய்யும் புளிசாதம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories