வரலாற்றுடன் தொடர்புடைய நதி: தாமிரபரணி புராணம் நூல் வெளியீட்டில் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்

tamirabarani puranam - 2026

தாமிரபரணி மகாபுஷ்கரம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்தியாவில் இருந்து பக்தகோடிகள் தாமிரபரணி நதிக்கு வந்து புனித நீராடுவதுடன் தங்களுடைய முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன்களையும் செய்து வாழ்க்கையில் வளம்பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

தாமிரபரணி நதியானது ஆன்மிகத்தோடு மட்டுமல்லாமல் சரித்திர நிகழ்வுகளோடும் சம்பந்தமுடையதாகும். தாமிரபரணி நதிக்கரையோரம் பல கோயில்கள் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கின்றன. வடக்கே இருந்து வேதம் பயின்ற வல்லுனர்கள் இந்நதிக்கரையோரமாக குடியேறினார்கள் என்றும் இங்குள்ள சில கோயில்களில் அவர்களுக்கு பரம்பரையாக கோயில் கட்டளை உள்ளது என்றும் வரலாற்று செய்திகள் மூலமாக அறிந்து கொள்கிறோம்.

காஷ்மீர் தேசத்து ராஜா தாமிரபரணி நதியில் நீராடி பிள்ளைப் பேறு பெற்றதாகவும் அதனை எண்ணி சேரன்மகாதேவியில் உள்ள ஆலயத்திற்கு சில மானியங்களை வழங்கியதாகவும் திருநெல்வேலி கல்வெட்டுக்கள் சொல்கின்றன. தொல்காப்பியர் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலை எழுதுவதற்கு ஆதாரமாக இருந்த அகத்தியம் என்னும் இலக்கண நூலை தென்பொதிகை மலையில் தாமிரபரணி நதிக்கரையோரமாகத்தான் அகத்தியர் செய்தார் என்ற நம்பிக்கையும் இவ்வூர் மக்களிடையே இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தாமிரபரணி நதியானது வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஜீவநதியாகும். இந்த நதியின் அழகைப் பார்ப்பதற்காக பாபநாசத்திற்கு வந்த சீன யாத்திரிகர்கள் பாபநாசம் படித்துறைக்கு கீழே அழகிய மீன்கள் ஆடி, ஓடி விளையாடுவதை கண்டதாகவும் தங்களுடைய குறிப்புக்களில் எழுதி இருக்கிறார்கள்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

மகாகவி பாரதியார் தாமிரபரணி நதியில் புனித நீராடியதோடு தாமிரபரணி நதிக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் குரங்குகள் எப்படி ஆட்டம் போடுகின்றன என்பதைப் பற்றியும் ஒரு கட்டுரையில் நகைச்சுவையாக எழுதி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்…. என்று கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் தனது சொற்பொழிவில் குறிப்பிட்டார்.

சிருங்கேரி மகா சன்னிதானம், சன்னிதானம் ஆகியோரின் அருள் ஆசியுடன் தாமிரபரணி புராணத்தை எழுதி இருப்பதாகவும் இந்நூலை தாமிரபரணி மகாபுஷ்கர காலகட்டத்தில் திருநெல்வேலியில் வெளியீடு செய்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தனது ஏற்புரையில் கீழாம்பூர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

ஸ்ரீ விவேக சம்வர்தனி சபா ஆதரவில், தாமிரபரணி புராணம் என்னும் நூலை கல்வியாளர் ஜி.வி.கிருஷ்ணன் வெளியிட முதல் பிரதியை ஆடிட்டர் ஜி.நடராஜன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தேஜஸ் பவுண்டேஷனைச் சேர்ந்த பிடிடி ராஜன், இஸ்ரோ விஞ்ஞானி கிருஷ்ணன், சிவசுந்தரி ஆசிரியர் ஆட்சிலிங்கம், திருநெல்வேலி ஆண்டி வாத்தியாரின் சீடர் ஸ்ரீசேகர் வாத்தியார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கௌசிக் ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories