December 8, 2025, 10:18 AM
25.3 C
Chennai

பாரதி-100: கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை!

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு

பகுதி – 24, கண்ணன் – என் விளையாட்டுப்பிள்ளை

     கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை பாடல் நகேதாரம் இராகத்தில் கண்டஜாதி ஏகதாளத்தில் பாரதியாரால் எழுதப்பட்டுள்ளது. இதன் இரசங்கள் அற்புதம் மற்றும் சிருங்காரம் என பாரதியார் குறிப்பிட்டுள்ளோர். இனிப் பாடலைக் காண்போம்.

தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்

தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. … (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; – பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;

என்னப்பன் என்னையன் என்றால் – அதனை

எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். … (தீராத)

2. தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன

செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;

மானொத்த பெண்ணடி என்பான் – சற்று

மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; … (தீராத)

3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே – என்னை

அழஅழச் செய்துபின், ”கண்ணை மூடிக்கொள்;

குழலிலே சூட்டுவேன்” – என்பான் – என்னைக்

குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். … (தீராத)

4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; – தலை

பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;

வண்ணப் புதுச்சேலை தனிலே – புழுதி

வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். … (தீராத)

5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; – அமுது

பொங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்;

கள்ளால் மயங்குவது போலே – அதைக்

கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். … (தீராத)

6. அங்காந் திருக்கும்வாய் தனிலே – கண்ணன்

ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;

எங்காகிலும் பார்த்த துண்டோ ? – கண்ணன்

எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? … (தீராத)

7. விளையாட வாவென் றழைப்பான்; – வீட்டில்

வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;

இளையாரொ டாடிக் குதிப்பான்; – எம்மை

இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். … (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! – மூளி

அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,

எம்மைத் துயர்செய்யும் பெரியோர் – வீட்டில்

யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். … (தீராத)

9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; – பொய்ம்மை

குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;

ஆளுக் கிசைந்தபடி பேசித் – தெருவில்

அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். … (தீராத)      இப்பாடலின் பொருளை இப்போது காணலாம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சொல்வார்கள். தெய்வத்தை மகாகவி பாரதி, அதுவும் அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்த அந்த  ஆயர்பாடிக் கண்ணனை சற்றே வளர்ந்த குழந்தையாக பாவித்து இப்பாடலை எழுதியிருக்கிறார். தந்தையாக, ஆசானாக, சீடனாக, சிறு பெண் கண்ணம்மாவாக, சேவகனாகப் பார்த்தது ஒருபுறம் இருக்க, இன்று அவனை ஒரு குறும்புக்கார  சிறுவனாக  சித்தரிக்கிறார். இதனை ஒரு சிறுகதை வடிவில் தர நான் முயற்சிக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories