அடக் கடவுளே… இன்னும் எத்தனை நாள் … இந்த…

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

10 June01 sun
10 June01 sun

வருடாவருடம்…!
இரவு தரையில் தலையணை வைத்து படுத்தேன்
தரை தோசைக்கல்போல் சுட்டது
நான் தோசை போல் சூட்டை உறிஞ்சினேன்

பொறுக்கமுடியாமல் தோசைத்திருப்பி இல்லாமலே
முதலில் குப்புறத் திரும்பி
பின் மல்லாக்கப் படுத்து
சூட்டில் வறுபட்டு

எண்ணெய் இல்லாமலேயே
ஹெல்த்தியாக கோதுமை நிறத்துக்கு மாறினேன்

சட்னி துணை வருமோ என்று பார்த்தால்
பிரிட்ஜில் ஜில்லென்று ஒளிந்திருந்தது – சாம்பார்
எரிச்சலடைந்து ஆவியாகி
காற்றில் கலந்திருந்தது.

என்னை நானே மடித்துக் கொண்டு
என் வாழ்க்கை இவ்வளவுதான் என்றுணர்ந்து
ப்ளெயின் தோசையாக சுட்டு,
வறுபட்டு, வெந்து, பிய்ந்து, கருகி …
ம்… இப்படித் தரையில் கிடக்கையில்

காலையில் சூரியன்
போர்க் எடுத்து குத்த ஆரம்பித்தான்
அவனுக்கு ப்ரேக்பாஸ்ட் வேணுமாம்.

அம்மா…! கடவுளே!
இன்னும் எத்தனை நாள் இந்த வெய்யில்…?

  • தெலுங்கில்: உஷா துரகா ரேவல்லி
    தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

Related articles

Recent articles

spot_img