நான் … கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…

karunanithi3 - 2026

கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…
ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்…
நானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்…

பொதுவாய்
காரியமானால் கழற்றி விடுவர்…
அது எனக்கும் பொருந்தும்
உடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான்
இப்போது காட்சிப் பொருளாய் ஓர் ஓரத்தில்…
என் நான்கு கால்களும்
இரண்டு கைகளும்
பணிவிடைகள் செய்தே அசந்து போயின…

ஊதியமின்றி உழைத்தது
அவர் என் மீது வைத்த கரிசனம்
நான் அவர் மீது கொண்ட விசுவாசம்..

இருந்தாலும்
அவரின் முதுமையையும் நோயையும்
நன்கு அறிந்து செயல்பட்டதால்…

எனக்கு எந்த ஒரு விருதும் சிலையும் வைக்க வேண்டாம்..
அதை நான் கேட்கவுமில்லை…

பகுத்தறிவு வாதமும் சித்தாந்தமும் யாருக்கு வேண்டும்
என்னுடைய மூச்சும் பேச்சும் மனித நேயம் மட்டுமே!

அவர் விடும் மூச்சுக் காற்றில் இருந்து தும்மும்
எச்சில் துளிகளைக் கூட
பொறுமையுடன் வாங்கிக் கொண்டவன்

கட்சிக் காரர்கள் உறவினர்கள் என யார் வந்தாலும்
என் தோள்கள் வளைந்து கொடுத்து
ஈடு கொடுத்தன
என் தோழமையைவிட
அந்த முதலமைச்சர் நாற்காலி கை கூடாமல் போனதுதான்
துரதிர்ஷ்டம்…

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

என்ன செய்வது..
என்னோடு அவர் வாழ்ந்த தினங்கள் குறைவு என்றாலும்…

பழகிய பேசிய நாள்கள் அதிகம்..
நான் செல்லாத விழாக்கள் இல்லை
அவரை ரசிக்காத கருத்துகள் இல்லை..

gopaldasan - 2026
கவிஞர் கோபால்தாசன்

நானின்றி அவரில்லை
அவரின்றி நானில்லை…
அவர் தமிழ்ப் பற்றும் நாட்டுப் பற்றும்
என்னை ஆட்கொண்டு விட்டதால்…
பிரிக்க முடியா உடலாகி விட்டேன்…
தற்போது வெறும் உடலாகத்தான் கிடக்கிறேன்…
உயிர் அவரோடு இணைந்து விட்டதாய் உணர்கிறேன்..

நண்பர்களே…
இனிவரும் காலங்களில்
அவருக்கு  நினைவில்லமோ
மணிமண்டபமோ எழுப்புவீர்களேயானால்…
அவரோடு வாழ்ந்த எனக்கொரு இடம் கொடுங்கள்…
அது போதும்…!!

கவிதை: – கவிஞர் கோபால்தாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories