தீபாவளிக்கு ஊருக்குப் போகணுமா? முந்துங்க… பஸ்ஸுக்கு!

Published:

bus sengottai - 2026

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. www.tnstc.in,Redbus, paytm ஆகிய இணையதளங்களில், இவற்றுக்காக முன்பதிவு செய்யலாம்!

தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக அரசு பஸ்களில் செவ்வாய்க்கிழமை இன்று (ஆக.27) காலை முதல் முன்பதிவு தொடங்கியது.

தீபாவளி பண்டிகை, அக்.27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையைக் கொண்டாட அக்.25 முதல் வெளியூர் செல்வோருக்கு வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் இன்று முன்பதிவை தொடங்கியது.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், சிறப்பு ரயில்களுக்காக ரயில் பயணியர் காத்திருக்கின்றனர்.

ரயில்களைத் தவிர்த்து அரசு விரைவுப் பேருந்துகளில் செல்ல விரும்புவோருக்கு இன்று முன்பதிவு தொடங்கப் பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் விடப் படும் என்றாலும், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, இன்று காலையே பலரும் பஸ்களில் புக் செய்ய தயாராகினர்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

அரசு பஸ்கள் மட்டுமல்லாது தனியார் ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்ய பயணிகள் பலர் காத்திருக்கின்றனர்.

பொதுவாக, அரசு பஸ்களில் 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, அக்., 25ஆம் தேதி சொந்த ஊர் பயணிக்க விரும்புவோர், இன்று, www.tnstc.in, Redbus,paytm இணையதளங்களிலும் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img