சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்திய திராவிட விடுதலை கழகத்தினர் கைது
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிராக ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஊர்வலம் நடத்தியவர்கள் கைது
கடலில் சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை -குமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரை கடலில் சூறைக்காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ வேகத்தில் வீசும்போது 12 அடிவரை அலைகள் எழ வாய்ப்பு உள்ளது*
1] கொரிய தீபகற்பத்தில் பதட்டம்: வட கொரிய தலைநகரை அழித்துவிட திட்டமா? -மேற்கொள்ளப்பட இருக்கும் அணு குண்டு தாக்குதலை குறிப்புணர்த்தி வட கொரியாவின் தலைநகரை முழுமையாக அழித்து விடுகின்ற திட்டம் ஒன்றை தென் கொரிய அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கும் கொரிய தீபகற்பத்தில் விவாதங்கள் அதிகரித்துள்ளன.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த திட்டத்தின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அரசடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள யான் ஹப் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.
2] செளதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்து சுமார் ஒன்றரை 15 லட்சம் இஸ்லாமியர்கள் இறுதி ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
3] இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் மேலும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன; தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
4] சிரியாவின் உள்ளே நடக்கும் தற்போதைய நடவடிக்கை, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிற்கு எதிரான சண்டையின் முதல் படி என்று துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் தெரிவித்துள்ளார்
5] ஸ்பெயினில் பெரிதும் விரும்பப்படும் எருது விடும் விளையாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென கோரி ஆயிரக்கணக்கானோர் மாட்ரிட் வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்
6] வெனிஸ் திரைப்பட விழா: பிலிப்பைன்ஸ் திரைப்படத்திற்கு தங்க சிங்க விருது -பிலிப்பைன்ஸில் நடைபெறும் பழிவாங்கும் கதை ஒன்று வெனிஸ் திரைப்பட விழாவில் உயரியதொரு விருதை வென்றிருக்கிறது.கறுப்பு வெள்ளை வண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பிலிப்பைன்ஸை சேர்ந்த இயக்குநர் லே டையஸால் இயக்கப்பட்ட “த வுமென் கு லெப்ட்” என்ற திரைப்படம் அநியாயமாக சிறைப்படுத்தப்படும் ஆசிரியை பற்றி விவரிக்கிறது
7] கர்நாடகத்தில் உள்ள எழுச்சி இங்கே இல்லை. இது வருந்தத்தக்கது. இப்போது நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்
8] அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் ரொமான்ஸ் இயக்குனர் கெளதம் மேனன் வில்லனாக நடிகவுள்ளார்
9] விஷால் “எல்லா அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே சங்கத்திற்குள் அரசியலை கொண்டு வர விருப்பமில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மேற்பார்வையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் என்னிடம் கருத்து கேட்டால் நான் கூறுவேன். ஆனால் நடிகர் சங்க நிர்வாகி என்ற முறையில் என்னால் எதுவும் கூற முடியாது. காவிரி விவகாரத்தில் நடிகர் சங்கம் தலையிடாது” என்று கூறினார்
10] ராதிகா ஆப்தே நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படைத்தின் படுக்கறை காட்சிகள் இணையதளங்களில் ஏற்கனவே வெளியாகியது. அதைத்தொடர்ந்து தற்போது அந்த வீடியோ காட்சி உடைய டிவிடி ரூ.90க்கு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது -பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் தாயாரிப்பில் வெளிவரவுள்ள பார்ச்ட் என்ற திரைப்படத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படுக்கறை காட்சிகள் ஏற்கனவே இணையதளத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதைத்தொடர்ந்து அந்த காட்சிகள் கொண்ட டிவிடி சந்தையில் ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படம் வருகிற 28ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் இதுகுறித்து அஜய் தேவ்கான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்
11] *கமல்ஹாசன் தன்னுயை டிவிட்டர் பக்கத்தில் “நவம்பர் மாதத்திலிருந்து நான் என்னுடைய வேலையை தொடங்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். எல்லோருடைய அன்பாலும் விரைவில் குணமடைந்துவிட்டேன். எல்லோருக்கும் நன்றி. சபாஷ் நாயுடு திரைப்படம் மூலம் அந்த அன்பை திருப்பித் தருவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்
12] ஜாகிர் நாயக் ஒன்றும் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிகளின் தலைவர் கிடையாது, தவறு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு தெரிவித்து உள்ளார்
13] சுப்ரமணிய சாமிக்கு தமிழ் ரத்னா விருது: அமெரிக்க தமிழ்ச் சங்கம் வழங்கியது
14] 22 பேரை பலி கொண்ட டாக்கா ஓட்டல் பயங்கரவாத தாக்குதல் பயங்கரவாதி தற்கொலை செய்துக் கொண்டான்
15] வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னையில் 2 நாட்களுக்கு இரவில் பலத்த மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்
16] டெல்லி: ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைவர் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்
17] * காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் சிறப்பு மனு நாளை காலை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது*
18] திருவாடனை அருகே நாரேந்தலில் லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். நமுதாழை கிராமத்தைச் சேர்ந்த ராகவன் மற்றும் உத்தரகுமார் விபத்தில் உயிரிழந்தனர்
19] * மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் மரக்கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மரக்கடைக்கு அருகே இருந்த 5 கார்களும் தீயில் எரிந்து நாசமாகியது*
20] குளித்தலை அருகே அய்யர் மலையில் மணல் லாரி மோதி ஸ்கூட்டரில் சென்ற சுருமாயி என்பவர் உயிரிழந்தார். அரசு வேகத்தில் செல்லும் மணல் லாரிகளுக்கு தடை விதிக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்
21] இறுதிமூச்சு வரை அரசியலில் இருப்பேன்; சரத்குமார்
22] ரஷ்யா, அமெரிக்கா செல்கிறார் ராஜ்நாத்
23] பெங்களூருவில் கன்னட வெறியர்களால் தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்
vishwarubam9962023699



