சாய்பாபா பிரசாதத்தில் கலந்த விஷம்! ஏமாற்றி பேராசிரியரைக் கொன்ற அலுவலக உதவியாளர்!

murder - 2026

சென்னையில் சாய்பாபா பிரசாதத்தில் விஷம் வைத்து பேராசிரியர் கொலை செய்துள்ளார் மத்திய அரசு ஊழியர் ஒருவர்!

சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவை சேர்ந்தவர் பேராசிரியர் கார்த்திக். (35) ஆட்குறைப்பு காரணமாக இவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர்.

காசிமேட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், 8 வயதில் சர்வேஷ் 6 வயதில் சர்வின் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு முல்லை நகர் பஸ் ஸ்டேண்ட் அருகே பைக்கில் மனைவியுடன் காரத்திக் சென்று கொண்டிருந்தார். அப்போது, கார்த்திக்குக்கு திடீரென மயக்கம் வந்து பைக்குடன் சாய்ந்து விழுந்தார். இதில் சரண்யாவும் கிழே விழுந்து காயமடைந்தார்.

Panchamirtham - 2026

அங்கிருந்தோர் இவர்களை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கார்த்திக் உயிரிழந்துவிட்டார். சரண்யாவுக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மனதை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

வேலாயுதம் (43), கிண்டியில் உள்ள நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி மையமான கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில், அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார்.
கார்த்திக் 4 வருஷத்துக்கு முன்பு, வேலாயுதத்திடம் அரசு வேலைக்காக 4 லட்சம் ரூபாய் தந்ததகவும், ஆனால் அந்த பணத்தையும் வேலையையும் வேலாயுதம் வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வேலாயுதம் “கவர்ன்மெட் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் வந்திருப்பதாகவும். நேரில வந்து வாங்கி செல்லுமாறும் கார்த்திக்கிடம் சொல்லி உள்ளார்.

kaarthik - 2026

இதனால் மகிழ்ந்த கார்த்திக், சரண்யாவை கூட்டிக் கொண்டு, வேலாயுதம் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வேலாயுதம் சீரடி சாய்பாபா பிரசாதம் என்று சொல்லி, பஞ்சாமிர்தத்தை தம்பதி இருவருக்கும் சாப்பிட சொல்லி உள்ளார்.

கார்த்திக் அதை வாங்கி உடனே சாப்பிட்டுள்ளார். லேசாக மயக்கம் வரவும் தண்ணீரை குடித்து இருக்கிறார். பக்கத்தில் பிரசாதத்தை சாப்பிட போன சரண்யாவை சாப்பிட வேண்டாம் என்று சொல்லி தடுத்துவிட்டு, பைக்கில் உட்கார வைத்து கொண்டு அழைத்து வந்துள்ளார்.

வரும் வழியில் மயங்கி விழுந்துள்ளார் கார்த்திக். சரண்யா இவ்வாறு சொல்லி முடித்ததையடுத்து, எம்.கே.பி நகர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வேலாயுதத்தை கைது செய்தனர். 4 லட்சம் பணத்தை கேட்டு கார்த்திக் நச்சரித்து கொண்டே இருந்ததால்தான், லேப்-பில் இருந்த சல்ஃபூரிக் பவுடரை பிரசாதத்தில் கலந்து கொடுத்தாக வாக்குமூலம் தந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories