மனைவியை விட்டு விலக மறுத்த கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த பயங்கரம்; கள்ளக்காதலன் உள்பட 3பேர் கைது.!

marder 1 - 2026

கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை கொன்று விட்டு நாடகமாடிய பெண் கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து கள்ளக்காதலன் உள்பட 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைக்குடி தந்தை பெரியார் நகர் சாய்பாபா காலனியை சேர்ந்தவர் மணிமுத்து(வயது 52).

இவரது மனைவி பூமதி(46). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

மணிமுத்து கடந்த 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

அவ்வப்போது காரைக்குடிக்கு வந்து செல்வது வழக்கம்.

karikudi mardar 1 - 2026

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் காரைக்குடி வந்தார்.

இந்த நிலையில் இரவில் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து இருந்த மணிமுத்து உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி பூமதி, காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் பூமதி மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் பூமதி முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதில் போலீசார் சந்தேகமடைந்து, அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் பூமதி ஆட்களை வைத்து தனது கணவரை கொலை செய்தது அம்பலமானது.

இதுகுறித்து மேலும் நடந்த விசாரணையில் பூமதிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த வேல்முருகன்(62) என்பவருக்கும் பல வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, வேல்முருகன் அடிக்கடி பூமதி வீட்டுக்கு வந்துள்ளார்.

vettu 2 1 - 2026

பின்பு அவர்களிடையே நெருக்கமான பழக்கம் உண்டாகி, கள்ளத்தொடர்பாக நீடித்து வந்தது. இதை மணிமுத்து குடும்பத்தார் கண்டித்துள்ளனர்.

ஆனால் பூமதி கேட்கவில்லை. இதையடுத்து காரைக்குடி அருகே தேத்தாம்பட்டியில் சொந்த வீட்டில் வசித்து வந்த பூமதியின் குடும்பத்தை வேல்முருகன், காரைக்குடியில் வாடகை வீட்டிற்கு மாற்றியுள்ளார்.

அதைத்தொடர்ந்து வேல்முருகன், பூமதி சந்திப்பு அதிகமானது.

இந்தநிலையில் திடீரென மணிமுத்து காரைக்குடி வந்துள்ளார்.

அவருக்கு மனைவி வேல்முருகன் குறித்து கள்ளத்தொடா்பு தெரியவந்ததும், மனைவியை கண்டித்துள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பூமதி, வேல்முருகனிடம் கூறவும் அவர் மணிமுத்துவை மிரட்டி உள்ளார்.

kithau - 2026

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அதில் கோபத்துடன் மணிமுத்து வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று படுத்துவிட்டார்.

தகராறு குறித்து வேல்முருகனிடம் பூமதி கூறியதை தொடர்ந்து, இருவரும் சதித்திட்டம் தீட்டினர்.

அதைத்தொடர்ந்து வேல்முருகன், ராமநாதபுரத்தை சேர்ந்த 3 பேரை தன்னுடன் அழைத்துக்கொண்டு பூமதி வீட்டிற்கு வந்தார்.

அவர்களுக்கு கதவை திறந்து விட்ட பூமதி தனது கணவன் மேல் மாடியில் படுத்திருப்பதாக கூறவும்,
வேல்முருகனும் அவருடன் வந்த மற்ற 3 பேரும் மாடிக்கு சென்று மணிமுத்துவிடம் பூமதியை விட்டு விலகி செல்லுமாறு மிரட்டினர்.

அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காமல் அவர்களிடம் தகராறு செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் உள்பட 4 பேரும் சேர்ந்து மணிமுத்துவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர்.

அதன் பின்பு பூமதி ஒன்றும் தெரியாதது போல் கணவரை யாரோ கொன்றுவிட்டதாக போலீசில் புகார் செய்தார்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பூமதி உண்மையை ஒப்புக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து பூமதி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் வேல்முருகனும் கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ்(19) என்ற மயான ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories