மனைவியை விட்டு விலக மறுத்த கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த பயங்கரம்; கள்ளக்காதலன் உள்பட 3பேர் கைது.!

marder 1 - 2026

கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை கொன்று விட்டு நாடகமாடிய பெண் கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து கள்ளக்காதலன் உள்பட 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைக்குடி தந்தை பெரியார் நகர் சாய்பாபா காலனியை சேர்ந்தவர் மணிமுத்து(வயது 52).

இவரது மனைவி பூமதி(46). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

மணிமுத்து கடந்த 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

அவ்வப்போது காரைக்குடிக்கு வந்து செல்வது வழக்கம்.

karikudi mardar 1 - 2026

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் காரைக்குடி வந்தார்.

இந்த நிலையில் இரவில் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து இருந்த மணிமுத்து உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி பூமதி, காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

அதன்பேரில் பூமதி மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் பூமதி முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதில் போலீசார் சந்தேகமடைந்து, அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் பூமதி ஆட்களை வைத்து தனது கணவரை கொலை செய்தது அம்பலமானது.

இதுகுறித்து மேலும் நடந்த விசாரணையில் பூமதிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த வேல்முருகன்(62) என்பவருக்கும் பல வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, வேல்முருகன் அடிக்கடி பூமதி வீட்டுக்கு வந்துள்ளார்.

vettu 2 1 - 2026

பின்பு அவர்களிடையே நெருக்கமான பழக்கம் உண்டாகி, கள்ளத்தொடர்பாக நீடித்து வந்தது. இதை மணிமுத்து குடும்பத்தார் கண்டித்துள்ளனர்.

ஆனால் பூமதி கேட்கவில்லை. இதையடுத்து காரைக்குடி அருகே தேத்தாம்பட்டியில் சொந்த வீட்டில் வசித்து வந்த பூமதியின் குடும்பத்தை வேல்முருகன், காரைக்குடியில் வாடகை வீட்டிற்கு மாற்றியுள்ளார்.

அதைத்தொடர்ந்து வேல்முருகன், பூமதி சந்திப்பு அதிகமானது.

இந்தநிலையில் திடீரென மணிமுத்து காரைக்குடி வந்துள்ளார்.

அவருக்கு மனைவி வேல்முருகன் குறித்து கள்ளத்தொடா்பு தெரியவந்ததும், மனைவியை கண்டித்துள்ளார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பூமதி, வேல்முருகனிடம் கூறவும் அவர் மணிமுத்துவை மிரட்டி உள்ளார்.

kithau - 2026

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அதில் கோபத்துடன் மணிமுத்து வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று படுத்துவிட்டார்.

தகராறு குறித்து வேல்முருகனிடம் பூமதி கூறியதை தொடர்ந்து, இருவரும் சதித்திட்டம் தீட்டினர்.

அதைத்தொடர்ந்து வேல்முருகன், ராமநாதபுரத்தை சேர்ந்த 3 பேரை தன்னுடன் அழைத்துக்கொண்டு பூமதி வீட்டிற்கு வந்தார்.

அவர்களுக்கு கதவை திறந்து விட்ட பூமதி தனது கணவன் மேல் மாடியில் படுத்திருப்பதாக கூறவும்,
வேல்முருகனும் அவருடன் வந்த மற்ற 3 பேரும் மாடிக்கு சென்று மணிமுத்துவிடம் பூமதியை விட்டு விலகி செல்லுமாறு மிரட்டினர்.

அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காமல் அவர்களிடம் தகராறு செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் உள்பட 4 பேரும் சேர்ந்து மணிமுத்துவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர்.

அதன் பின்பு பூமதி ஒன்றும் தெரியாதது போல் கணவரை யாரோ கொன்றுவிட்டதாக போலீசில் புகார் செய்தார்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பூமதி உண்மையை ஒப்புக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து பூமதி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் வேல்முருகனும் கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ்(19) என்ற மயான ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories