திமுக பொதுக்குழு கூட்டத்தில் செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு

சென்னை:
கருணாநிதி பங்குபெறாமல் முதல் முறையாக திமுக பொதுக்குழு கூடியது. கடந்த 48 ஆண்டுகளில் கருணாநிதி கலந்து கொள்ளாத முதல் பொதுக்குழு இது. இதில் திமுகவின் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

1949ஆம் ஆண்டு திகவில் இருந்து திமுக பிரிந்து தனியாக துவங்கப்பட்ட போது கருணாநிதிக்கு வயது 25. அன்று முதல் இன்று வரை கடந்த 68 ஆண்டுகள் திமுகவின் முதுகெலும்பாக இருந்து வழிநடத்திவருகிறார்.

1969ஆம் ஆண்டு திமுக தலைவராக பொறுப்பேற்று கொண்ட கருணாநிதி கடந்த 48 ஆண்டுகளாக பொதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று நடக்கும் பொதுக்குழுவில் கருணாநிதியால் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

திமுக பொதுக்குழு இன்று காலை, அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் கூடியது. பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 4 ஆயிரம் அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது, அரங்கில் இடம் போதாததால் வெளியில் திரை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

8 மணிக்கு காலை உணவு முடித்து விட்டு அனைவரும் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தனர். மேடையில் யாரும் ஸ்டாலினுக்கு சால்வை போடக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

பொதுக்குழுவில் பேராசிரியர் தீர்மானம் வாசித்ததும், எதிர்பார்த்தது போல செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த தீர்மானத்தை க.அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் அதனை வழி மொழிந்தார். அன்பழகன் அந்த தீர்மானத்தை வாசித்த போது திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் உற்சாகமாக கை தட்டி வரவேற்பு அளித்தனர்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தபிறகும் கருணாநிதிக்கு தொண்டையில் செயற்கை சுவாசத்துக்காக போடப்பட்ட டியூப் இன்னும் அப்படியே இருக்கிறதாம். எனவே திமுகவின் தலைவராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டு 48 ஆண்டுகளில் முதன் முறையாக அவர் இல்லாமல் பொதுக்குழு கூடியது.

கருணாநிதியை வீல்சேரில் உட்காரவைத்து பொதுக்குழு கூட்டத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்றுதான் முதலில் ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்றால் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டதால் பொதுக்குழுவுக்கு கருணாநிதி வரவில்லை என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

dmk-gb-meets-the-first-time-without-karunanidhi

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories