ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது பலப்பிரயோகம் கூடாது: ராம.கோபாலன்

சென்னை:

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது மாநில அரசு பலப்பிரயோகம் செய்வதை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

மத்தியில் ஆண்ட காங்கிரஸ் திமுக கூட்டாட்சியில் காளையை உள்நோக்கத்துடன் காட்சிப் பொருள் பட்டியலில் சேர்ந்ததன் விளைவாக பீட்டா அமைப்பு உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தொடர்ந்து தடை வாங்கியது. சென்ற ஆண்டு காட்சிப் பட்டியலில் இருந்து மத்திய அரசு காளையை விலக்கிவிட்ட நிலையில், அரசாணையை உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் உச்சநீதி மன்றத்தில் நடந்த வழக்கில் நீதியரசர்களின் கேள்விகள் சாதாரண மக்களை எரிச்சலூட்டின. இதனை அடுத்து திரு. சுப்ரமணிய சுவாமி அவர்கள் ஒரு மனுவை தாக்கள் செய்தார்.அதனை ஏற்ற விசாரணையை அத்துடன் முடித்துக்கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தள்ளி வைத்தனர். மத்திய அரசு சார்பில் மகரசங்கராந்திக்கு முன் தீர்ப்பை வழங்கக் கேட்டுக்கொண்டதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

எந்த வழக்கும் எதற்காக நடைபெறுகிறது என்பதை பற்றி கவலையில்லை என எந்த நீதிமன்றமாவது கூறினால், நீதிமன்றம் மாண்பை இழக்கும் அபாயம் இருக்கிறது. காலதாமத்தப்படுத்தும் தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பாககக் கருதப்படும் என்பதை மறக்க வேண்டாம். அதுபோலத்தான் பொங்கலுக்கு முன் தீர்ப்பை எதிர்ப்பார்த்த மக்களுக்கு அளித்த பதிலும் நீதிமன்றத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது என இந்து முன்னணியின் கருத்துகிறது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

மாநில அரசு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான ஆதரவை ஜனநாயக வழியில் போராட்டங்கள் வாயிலாக தெரிவிக்கும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க இந்து முன்னணி வேண்டுகோள் விடுகிறது. பலப்பிரயோகம் செய்வது, கைது நடவடிக்கை, வழக்குப் பதிவு செய்வது போன்றவற்றை தமிழக தவிர்க்க கேட்டுக்கொள்கிறோம்.

இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணியும் இணைந்து நிற்கிறது. தமிழகத்தின் பல இடங்களிலும் இந்து முன்னணி சார்பிலும் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

தமிழக மக்களின் உணர்வுகளை இந்த நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறோம். நீதிமன்றத்திலும் நமது தரப்பு வாதங்களை முன்னிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறோம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என்ற பெயரில் மக்களை திசைத்திருப்ப, தேச விரோத சக்திகள் முனைகின்றன. திராவிட இயக்கங்களும், பிரிவினைவாத தீய சக்திகளும், இடதுசாரி பயங்கரவாத அமைப்புகளும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போராட தூண்டுகின்றன. பிரிவினை கருத்துக்களை வெளிப்படுத்தியும் வருகின்றன. தேச விரோதிகளை அடையாளம் கண்டு மக்கள் ஒதுக்க வேண்டும். தேசிய கொடியை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது. சில சினிமா பிரபலங்கள் இந்தப் பிரச்னையில் தேவையற்ற கருத்துகளை கூறி வன்முறையைத் தூண்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படவும், பதட்டத்தை தணிக்கவும் முன் வர வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories