December 5, 2025, 6:50 PM
26.7 C
Chennai

“இதுவே கடைசியாக இருக்கட்டும்”: மாஞ்சா நூலறுத்து உயிரிழந்த சிறுவனின் தந்தை கண்ணீர்!

manja - 2025

இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று, மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சிறுவனின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார். மாஞ்சாவால் இனியும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்று அவர் தன் மனவருத்தத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமித்ரா மற்றும் ஒரே மகன் அபிநவ் ஷராப்.

கோபால்  தனது மகன் மற்றும் மனைவியுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் எவரோ பட்டம் விட்டு அப்படியே விட்டுப் போயிருந்த மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயதுக் குழந்தை அபிநவ் உயிரிழந்தான்.

மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டம் விட்டதில் சென்னையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பட்டம் விட்ட கொருக்குப்பேட்டை நாகராஜ் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தை அபிநவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. பின் அபிநவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் உடலைக் கண்டு குழந்தையின் உறவினர்கள் கதறி அழுதனர்.

தன் குழந்தை மரணம் குறித்து கோபால் கூறிய போது… “வெளியில் கூட்டிக் கொண்டு செல்லலாமே என்று தான் அவனை பைக் முன்புறம் வழக்கம் போல் அமர வைத்து சென்று கொண்டிருந்தேன். நான் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை. எங்கிருந்தோ அறுந்து வந்த மாஞ்சா கயிறு என் மகன் உயிரைப் பறித்துவிட்டது.

manja 1 1 - 2025

என் கண் முன்னேயே நடந்த இந்தச் சம்பவத்தை பார்க்க வேண்டிய கொடுமை… நினைத்துப் பார்த்தால் மனம் கனக்கிறது. என் கண் முன்னே துடித்த என் மகனைக் காப்பாற்ற முடியாமல் துடித்தேன்… அப்படியே என் உயிரும் சேர்ந்து போய்விடக் கூடாதா என்றுதான் நினைத்தேன்.

நாங்கள் தவமிருருந்து பெற்ற ஒரே மகன். அபிநவ் விளையாடுவதை மணிக் கணக்காக அமர்ந்து ரசிப்போம். சுட்டித்தனம் நிறைய. அவன் தான் எங்கள் உலகமாக இருந்தான். அவன் இல்லாத நாளை இனி எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

இதுவே கடைசி சம்பவமாக இருக்கட்டும். இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. எந்தப் பெற்றோருக்கும் இதுபோல் நடக்கக் கூடாது. அதற்கான முயற்சியை போலீஸ் எடுக்கும் என்று நம்புகிறோம்” என கதறி அழுதார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories