December 6, 2025, 9:12 AM
26.8 C
Chennai

தண்டவாளத்தில் அமர்ந்து தண்ணி அடித்து… மதுபோதை தலைக்கேறி… ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு!

train - 2025

கோவை மாவட்டம் சூலூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் போதை தலைக்கேறிய நிலையில், தண்டவாளத்திலேயே மயங்கி விட்டுள்ளனர். அவர்கள் மீது ரயில் மோதியதில் நான்கு மாணவர்களும் துடிதுடித்து உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கவுதம் ஆகிய இரு இளைஞர்கள், சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் அரியர் தேர்வு எழுதுவதற்காக நேற்று அங்கு சென்றனர். அருகில் வாடகைக்கு அறை எடுத்து தங்கிய அவர்கள், தற்போது அதே கல்லூரியில் படிக்கும் கொடைக்கானலைச் சேர்ந்த சோதிக் ராஜா, தேனியைச் சேர்ந்த விஸ்வனேஷ் மற்றும் நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோரை மது அருந்த அழைத்ததாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து மதுபாட்டில்கள் வாங்கிய அவர்கள், சூலூர் – இருகூர் இடையே ராவத்தூர் என்ற இடத்தில் உள்ள தண்டவாளத்திற்குச் சென்று அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. நேரம் செல்லச் செல்ல போதை தலைக்கு ஏறவே விஸ்வனேஷ் தவிர்த்து மற்று அனைவரும் தண்டவாளத்தில் மயங்கி விட்டனராம்.

அந்த நேரம், கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயில், தண்டவாளத்தில் மயங்கிக் கிடந்த இளைஞர்கள் மீது ஏறியது. இதில் தண்டவாளத்தில் மது போதையில் மயங்கிக்கிடந்த நால்வரும் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து சென்ற போத்தனூர் ரயில்வே போலீசார், 4 பேரின் உடல்களையும் மீட்டனர். மேலும், காயத்துடன் உயிருக்கு போராடிய விஸ்வனேசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்டவாளத்தின் ஓரத்தில் விஸ்வனேஷ் அமர்ந்திருந்திருக் கலாம் என்றும் அதன் காரணமாக அவர் படுகாயங்களுடன் தப்பி இருக்கலாம் என்றும் கூறப் படுகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories