குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். நெல்லை மாநகராட்சி பழைய பேட்டை நெல்லையாபுரம் தெருவில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போர் பயன்பெறும் வகையில் வீட்டுக் குடிநீர் இணைப்பு, பொது குடிநீர் குழாய் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. பழையபேட்டையில் உள்ள நீரேற்றும் நிலையத்தில் இருந்து இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக இப்பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லையாம். இதையடுத்து இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காலிக் குடங்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

