விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடந்த 2000-ஆவது ஆண்டில் நடந்த பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட 18 பேரை இன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. இன்று பேருந்து எரிப்பு வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி குற்றம் சாட்டப்பட்ட திருமாவளவன் உட்பட 18 பேர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்வதாக இன்று உத்தரவிட்டார். முன்னதாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த 2000-த்தில் 3 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது விழுப்புரம் மாவட்டம் லிங்காரெட்டிபாளையம் என்ற இடத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்துனர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீஸார் தொல். திருமாவளவன் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்து எரிப்பு வழக்கில் திருமாவளவன் விடுதலை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

