பரங்கிமலையில் ரூ.6 கோடியில் புதிய நடை மேம்பாலம்!

parankimalai - 2026

பரங்கிமலை மின்சார, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ரூ.6 கோடி செலவில் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த 6 மாதங் களில் நிறைவடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டியை போல், பரங்கிமலையும் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக உருவெடுத்து உள்ளது. மெட்ரோ ரயில் இணைப்பு வசதி வருகையாலும், பறக்கும் ரயில் சேவையும் விரைவில் இணைக்கப்படவுள்ளதால் பொது மக்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தெற்கு ரயில்வே பரங்கிமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இருக்கைகள் அமைத்தல், நடைமேடைகள் விரிவாக்கம், தேவையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேபோல், ஆலந்தூர் சாலையில் இருந்து மின்சார ரயில் நிலை யம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல வசதியாக புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னையில் பரங்கிமலை ரயில் நிலையம் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக மாறி வருகிறது. மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஆலந்தூரின் பிரதான சாலையும் இணைவதால், மக்களின் வருகை அதிகரித்துள்ளது.

பறக்கும் ரயில் நிலையமும் விரைவில் அமையவுள்ளதால், மக்கள் வருகை மேலும் பல மடங்கு அதிகரிக்கும். எனவே, பரங்கிமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை படிப்படியாக மேம்படுத்தி வருகிறோம்.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஏற்கெனவே உள்ள நடைமேடை சிறியதாக இருப்ப தால், பயணிகள் வந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும், அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

எனவே, ஆலந்தூர் சாலை – பரங்கிமலை ரயில் நிலையம் – மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ரூ.6 கோடி செலவில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. படிகளுடன் எஸ்கலேட்டர் வசதியும் அமைக்கப்படுகின்றன. இந்தப் பணிகள் அடுத்த 6 மாதங்களில் நிறைவடையும் என எதிர் பார்க்கிறோம்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories