கிரிஜா வைத்யநாதன் மாற்றப்படுவார்?

சென்னை:
தலைமைச் செயலராக இருக்கும் கிரிஜா வைத்யநாதன் விரைவில் மாற்றப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா அதிமுக., பொதுச் செயலர் ஆனார், முதல்வர் பதவிக்கு முயன்றார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால், நான்கு வருட சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார்.

அதற்கு முன்னதாக அவர் தன் சகோதரர் தினகரனை அதிமுக.,வின் துணைப் பொதுச் செயலராக நியமித்தார்.

இந்நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இன்று பொறுப்பெற்றார்.

இதனிடையே பெங்களூர் சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்த தினகரன், பெரிய பட்டியலுடன் அவரை சந்தித்தார். அதில், ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்ற பட்டியலும் அடங்கும். இவ்வாறு சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளியிடம் தமிழக அரசின் முக்கியமான முடிவுகள், அரசாங்க ரகசியங்கள் காண்பிக்கப்பட்டு, அவர் ஒப்புதலுடன் தமிழகத்தில் ஆட்சி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்தார் தினகரன்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

அந்தப் பட்டியலில், முதல் பெயரே கிரிஜா வைத்யநாதனின் பணியிட மாற்றம்தான் இருந்ததாம். ஆனால், தற்போது, கட்சிக்கும் ஆட்சிக்கும் மக்கள் மத்தியில் கெட்ட பெயரும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதால், இதனைச் சரிசெய்ய பெரும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும், உடனே இதைச் செய்தால் மேலும் அவப் பெயர் ஏற்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயங்கினாராம்.

இருப்பினும், மன்னார்குடி குடும்ப உறவுகளின் நெருக்கடிக்கும் சசிகலாவின் கட்டளைக்கும் அடிபணிந்து போக வேண்டிய நிலையில் முதல்வர் இருப்பதால், விரைவில் அடுத்த அதிரடியாக

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மாற்றப்படுவார் என்றும், நிதித்துறை செயலர் சண்முகத்துக்கு அந்த வாய்ப்பு வரும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories