குடியுரிமை சட்டத்தை ஆதரித்து… கோலங்கள்! கலக்கும் கிராமத்து மக்கள்!

kolam supportscaa - 2026

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பல்வேறு கிராமங்களிலும் கோலங்களை வரைந்து வருகின்றனர் மக்கள்.

மார்கழி மாதம் என்பதால், இயல்பாகவே இந்துக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அழகிய கோலங்களைப் போட்டு அழகு பார்ப்பது ஹிந்துக்களின் பழக்கம். இவை கலாசாரத்தின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது.

இந்துக்களின் கலாசார நடைமுறையை தனது அரசியல் கருத்துக்கான தளமாக்க, நாத்திகவாத ஹிந்து விரோத இஸ்லாமிய கிறிஸ்துவ ஆதரவாளர்களான திமுக., கையில் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுப்பது போல், பாஜக.,வினரும் தங்கள் எதிர்ப்பைத் தெரியப் படுத்த கோல அரசியலை கையில் எடுத்தது.

இதை அடுத்து, பலரும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து கருத்துகளை கோலங்களில் வரைந்து வைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஒரே கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் கோலமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகாவைச் சேர்ந்த ராமநத்தம் கிராமத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் கோலமிட்டுள்ளனர். மேலும், முரசொலி அலுவலக மூலப்பத்திரம் எங்கே என்ற கேள்வியும் கோலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆங்கில புத்தாண்டின் முதல் தினத்தன்று இடப்பட்ட கோலத்தில் புத்தாண்டு வாழ்த்துகளுடன், குடியுரிமை சட்டத்திற்கு பொதுமக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories