ஸ்மார்ட் கார்ட் இருந்தாதான்… பொங்கல் பரிசுத் தொகுப்பு!

Published:

pongalparisu - 2026

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வரும் 9-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கு பயனாளர்கள் ஸ்மார்ட் கார்ட் வைத்திருக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே தொடங்கி வைத்துவிட்டார். இந்த நிலையில் வரும் 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 4 நாட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கபட உள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க, தெரு வாரியாக குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படஉள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற வேண்டுமானால், ஸ்மார்ட் கார்டு எனப்படும் மின்னணு ரேஷன் அட்டையை அவசியம் கொண்டு வர வேண்டும்!

ஸ்மார்ட் கார்ட் கொண்டு வந்தால் மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும் என்று கூறப் பட்டுள்ளது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

ஆதார் அட்டையை வைத்தோ, அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி., – ஒருமுறை கடவுச்சொல்லை வைத்தோதான் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற முடியும்.

Related articles

Recent articles

spot_img