December 6, 2025, 7:34 PM
26.8 C
Chennai

கரூரில்… திமுக.,வினர் 300க்கும் மேற்பட்டோர் அதிமுக.,வில் ஐக்கியம்!

admk vijayabaskar - 2025

கரூர் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி & கலைஞர் பாசறை நிர்வாகிகள் சுமார் 300 நபர்கள் அதிமுக வில் ஐக்கியம்

தமிழக அளவில் திமுக கட்சியிலிருந்து தினந்தோறும் நாளுக்கு நாள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக கட்சிக்கு மாறும் மாவட்டத்தில் முதலிடம் பிடிப்பது கரூர் மாவட்டம் தான், ஏனென்றால் தற்போது அந்த திமுக் கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவர் செந்தில்பாலாஜி, இவர் ஏற்கனவே திமுக, மதிமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்றெல்லாம் மாறி தற்போது மீண்டும் திமுக கட்சிக்கே மாறியது தான்!

மேலும், ஆளும் கட்சியாக அதிமுக இருந்த போது எம்.எல்.ஏ & அமைச்சர் பதவிகளை அனுபவித்து விட்டு, அப்போது ஏராளமான திமுக நிர்வாகிகள் மீது வழக்கு போட்டு விட்டு மீண்டும் அமைச்சர் பதவி அதிமுக வில் கொடுக்கவில்லை என்று கூறி, அந்த கட்சியிலிருந்து வெளியேறியவரும் கூட என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில், ஒவ்வொரு நாளும் திமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக வில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளரும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான தினேஷ்குமார், கரூர் மாவட்ட கலைஞர் பகுத்தறிவு பாசறை அமைப்பாளரும், தாந்தோணி நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் க.ஆனந்தன், ராமேஸ்வரப்பட்டி சதீஷ்குமார், சிவகுமார், கார்த்திக், முத்துக்குமார், தாந்தோணி நகர அமைப்பாளர் கலைஞர் பாசறை கார்த்திகேயன், கலைஞர் பாசறை செயற்குழு உறுப்பினர் பாலசந்திரன், 44 வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் கோபிநாத், 47 வது வார்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு எஸ்.கார்த்திக், 46 வது வார்டு பிரதிநிதி மகன் அஸ்வின், கலைஞர் பாசறை இணைச் செயலாளர் பா.மணிமாறன், பசுபதிபாளையம் டேவிட், ஈசநத்தம் கிளைக் கழக இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு பசுவை பாலாஜி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி கரூர் தெற்கு நகர அதிமுக செயலாளர் விசிகே.ஜெயராஜ் தலைமையில் கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க வில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மத்திய நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories