காந்திஜியின் 73வது நினைவு நாள்! ஆளுநர், முதல்வர் மரியாதை!

Published:

gandhi day - 2026

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செய்தனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சென்னை சர்வோதய சங்கம் சார்பில் மகாத்மா காந்தியின் விருப்ப பாடலான ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் பாடப்பட்டது.

பின்னர் சர்வோதய சங்கத்தை சேர்ந்த மூதாட்டி சுப்புலட்சுமி மெரினாவில் காந்தி சிலை அமைந்ததற்கான வரலாற்று தகவல்களை வழங்க, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியை ஒட்டி காந்தி சிலைக்கு தறியால் நெய்யப்பட்ட கதர் நூல் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img