கணவனை இழந்த பெண் பாலியல் வன்கொடுமை; மர்மக் கொலை! 3 பேர் கைது!

murder 1 - 2026

பெண் மர்மமான முறையில் கொலையாகிக் கிடந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கணவரை இழந்த பெண் கொலையான சம்பவத்தில், அவரோடு தவறான தொடர்பில் இருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். அந்த இளைஞனால் தாக்கப்பட்டு மயக்கமுற்ற பெண்ணை குடிபோதையில் பாலியல் வன்கொடுமை செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த தப்பகுட்டை கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் 5 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். இரண்டு பெண் பிள்ளைகளோடும் மாமியாரோடும் வசித்த அந்தப் பெண், தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

கடந்த புதன்கிழமை அந்தப் பெண்ணின் சடலம் தலையில் அடிபட்ட நிலையில், அங்குள்ள புதர் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சக பெண் தொழிலாளி ஒருவரின் மகனான பார்த்திபன் என்ற 21 வயது இளைஞனுடன், 30 வயதான அந்தப் பெண்ணுக்கு தவறான தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இருவரும் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், அவ்வப்போது பார்த்திபன் அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று தான் கொடுத்த பணத்தை பெண்ணிடம் கேட்டுள்ளான் பார்த்திபன். பணத்தை தர முடியாது என்று வாக்குவாதம் செய்த அந்தப் பெண், தங்களுடைய தவறான தொடர்பு குறித்து பார்த்திபனின் தாயாரிடம் தெரிவித்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன், அந்தப் பெண்ணை இடித்துத் தள்ளியதில் அருகிலிருந்த கல்லில் தலை மோதி மயக்கமடைந்துள்ளார். அவர் இறந்துவிட்டதாக எண்ணி, பார்த்திபன் அங்கிருந்து ஓடிவிட, சிறிது நேரத்தில் அவ்வழியே முழு போதையில் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவனும் பழனிசாமி என்பவனும் வந்துள்ளனர்.

மயங்கிக் கிடந்த அந்தப் பெண்ணின் நிலை தெரியாமல் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. இதில் மயங்கிய நிலையிலேயே அந்தப் பெண் உயிரிழந்திருக்கிறார். பார்த்திபன், பழனிசாமி, ரவி ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories