சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்த தாம்பரம் பொதுமக்கள்

Published:

சென்னை: ஏப்.4 சனிக்கிழமையன்று நிகழ்ந்த சந்திர கிரகணத்தை சென்னையில் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். தாம்பரம் வானவியல் கழகம் சார்பாக முழுசந்திர கிரகணத்தை தொலைநோக்கியில் காண்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் சுற்றுவட்டார மாணவர்கள், பொதுமக்கள் ஆவலுடன் வருகைதந்து கிரகணத்தை கண்டு ரசித்தார்கள். சிவப்புநிறத்தில் தோன்றிய நிலவு கிரகணம் முடிந்தவுடன் வழக்கமாக வெண்ணிலவாக காட்சியளித்தது. தகவல்: பாலு. சரவண சர்மா, தாம்பரம் வானியல் கழகம் https://youtu.be/MRb4L15gWKg

Related articles

Recent articles

spot_img