சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆள்திரட்டியவரைக் கைது செய்தது ராஜஸ்தான் போலீஸ்

isis terrorist - 2026

சென்னை:
ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக நிதி மற்றும் ஆட்களைத் திரட்டியதாக சென்னை முத்தையால் பேட்டையைச் சேர்ந்த ஆரூண் என்பவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஆரூண் என்பவர் சென்னை முத்தையால் பேட்டையில் வசித்து வந்தார். பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த இவர் ஈராக் நாட்டில் செயல்படும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு, இந்தியாவில் நிதி மற்றும் ஆட்களை திரட்டியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் முகமது என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

இதை யடுத்து, இன்று காலை ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், முத்தையால்பேட்டையில் ஹாரூணைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆரூண் ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுகிறார்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அத்தகைய தகவல்களின் பேரில் உளவு அமைப்பினரும் பல்வேறு மாநில காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டு, பலரைக் கைது செய்து வருகின்றனர்.

மத்திய அரசு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டும், தமிழக காவல் துறை நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அமைதி காத்து வருவது குறித்து பலராலும் கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு ஆள் மற்றும் நிதி திரட்டியவரை சென்னை முத்தயால்பேட்டையில் துப்புத் துலக்கி கைது செய்தது ராஜஸ்தான் போலீஸ்.

தமிழகத்திருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்பவர்கள் பெரும்பாலும் பிற மாநில போலீஸார் மற்றும் மத்திய என்.ஐ.எ அமைப்புதான். தமிழகத்தில் உள்ள பயங்கரவாதிகளையும் , பயங்கரவாத அமைப்புக்களையும் தமிழக காவல் துறை வளர விடுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஜுன் 22 அன்று ராமநாதபுரத்தில் கலவரம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைக் குறிக்கும் டி.ஷர்ட் அணிந்திருந்தனர். 2014 ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ் டி சர்ட் அணிந்து சூறாவளி கிளம்புகிறது என்று அறிவுப்பு செய்தனர் தொண்டியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர். இவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் பெருகி வரும் சர்வதேச பயங்கரவாதம் நாடு முழுவதும் நாசத்தை ஏற்படுத்தி வருகிறது கண்கூடாகத் தெரிந்தும், தமிழக காவல் துறை பயங்கரவாதத்திற்கு துணை போகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories