December 5, 2025, 1:12 PM
26.9 C
Chennai

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆள்திரட்டியவரைக் கைது செய்தது ராஜஸ்தான் போலீஸ்

isis terrorist - 2025

சென்னை:
ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக நிதி மற்றும் ஆட்களைத் திரட்டியதாக சென்னை முத்தையால் பேட்டையைச் சேர்ந்த ஆரூண் என்பவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஆரூண் என்பவர் சென்னை முத்தையால் பேட்டையில் வசித்து வந்தார். பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த இவர் ஈராக் நாட்டில் செயல்படும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு, இந்தியாவில் நிதி மற்றும் ஆட்களை திரட்டியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் முகமது என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

இதை யடுத்து, இன்று காலை ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், முத்தையால்பேட்டையில் ஹாரூணைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆரூண் ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுகிறார்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அத்தகைய தகவல்களின் பேரில் உளவு அமைப்பினரும் பல்வேறு மாநில காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டு, பலரைக் கைது செய்து வருகின்றனர்.

மத்திய அரசு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டும், தமிழக காவல் துறை நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அமைதி காத்து வருவது குறித்து பலராலும் கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு ஆள் மற்றும் நிதி திரட்டியவரை சென்னை முத்தயால்பேட்டையில் துப்புத் துலக்கி கைது செய்தது ராஜஸ்தான் போலீஸ்.

தமிழகத்திருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்பவர்கள் பெரும்பாலும் பிற மாநில போலீஸார் மற்றும் மத்திய என்.ஐ.எ அமைப்புதான். தமிழகத்தில் உள்ள பயங்கரவாதிகளையும் , பயங்கரவாத அமைப்புக்களையும் தமிழக காவல் துறை வளர விடுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஜுன் 22 அன்று ராமநாதபுரத்தில் கலவரம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைக் குறிக்கும் டி.ஷர்ட் அணிந்திருந்தனர். 2014 ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ் டி சர்ட் அணிந்து சூறாவளி கிளம்புகிறது என்று அறிவுப்பு செய்தனர் தொண்டியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர். இவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் பெருகி வரும் சர்வதேச பயங்கரவாதம் நாடு முழுவதும் நாசத்தை ஏற்படுத்தி வருகிறது கண்கூடாகத் தெரிந்தும், தமிழக காவல் துறை பயங்கரவாதத்திற்கு துணை போகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories