வாழ்வின் நிகழ்வுகளை நண்பனிடம் நம்பி பகிர்ந்த பெண்! மிரட்டி உறவு கொண்ட கொடூரம்!

vankodumai 1 1

பெண்ணின் அந்தரங்க படங்களை வைத்துக் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த நபரை குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் திவ்யா. 32 வயதான திவ்யா தனது கணவர் மற்றும் மகன் (8), மகள்(3) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் திவ்யா தன்னுடைய கணவருடன் சேர்ந்து தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வந்துள்ளார். அதில் ரத்தினக்குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இதனால் திவ்யா தனது குடும்பத்தில் ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்சனைகளை, நண்பராக நினைத்து ரத்தினகுமாரிடம் பகிர்ந்து வந்துள்ளார்.

நாளடைவில் திவ்யா திருமணத்திற்கு முன்னதாக வினய் கல்யாண் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் பற்றியும் கூறியுள்ளார்.

இதனை வைத்து ரத்தினகுமார் திவ்யாவை தொடர்ந்து மிரட்டத் தொடங்கியுள்ளார். மேலும் தான் சொல்வதை நீ கேட்டு நடந்து கொண்டால் இந்த ரகசியம் வெளியில் யாரிடமும் செல்லாது என மிரட்டி, வாட்ஸ் அப் மூலம் அந்தபெண்ணின் அந்தரங்க படங்களையும், வீடியோ கால் செய்ய வைத்து அதையும் பதிவு செய்து வைத்துக்கொண்டுள்ளார்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

இதனைத்தொடர்ந்து ஆபாச படங்களை இணையத்தில் பதிவு செய்து விடுவதாக மிரட்டி திவ்யாவிடம் தன்னுடைய பாலியல் ஆசையை தீர்த்து வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அதனையும் வீடியோ எடுத்து பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ளார்.

இதனிடையே திவ்யாவின் முன்னாள் காதலனான வினய் கல்யாண் உடன் இணைந்து கொண்டு தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட திவ்யா கணவரிடம் நடந்ததை எல்லாம் எடுத்துக் கூறி, அவருடன் சேர்ந்து வில்லிவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார்.

அந்த புகாரில் திவ்யா, “ரத்தினக்குமாரின் இ – மெயிலில் தன்னுடைய 1000க்கும் மேற்பட்ட அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன. அதனை ரத்தினகுமார் பல நபர்களுக்கு அனுப்பியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதேபோன்று அதே காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலும் 3 பெண் ஊழியர்களுக்கும் ரத்தினக்குமார் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து இந்த புகாரை வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து ரத்தினகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories