February 23, 2026, 7:19 PM
29 C
Chennai

மதுரையில் பேராசிரியைக்கு கத்திக் குத்து: விரக்தியில் இளைஞர் வெறிச்செயல்!

மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியை ஜெனிபாவை விரிவுரையாளராகப் பணியாற்றிய ஜோதிமுருகன் கத்தியால் குத்தியது ஏன் என்பது குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருபவர் ஜெனிபா. இன்று காலை பல்கலைக்கழகத்தில் இருந்த ஜெனிபாவை ஜோதி முருகன் என்பவர் கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த ஜெனிபா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். பேராசிரியை ஜெனிபாவை ஜோதிமுருகன் கொலைசெய்ய முயன்றது ஏன் என்பது குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை குளமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுருகன். இவர் எம்.எஸ்ஸி., எம்ஃபில் இதழியல்துறை படித்துள்ளார். கடந்தாண்டு காமராஜர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார் ஜோதிமுருகன். தற்காலிகப் பணியாளராகச் சேர்ந்த இவர், தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்தில் சில்மிஷம் செய்துவந்துள்ளார். மாணவிகளிடம் தவறாகப் பேசுவது; போனில் தொல்லை செய்வது உள்ளிட்ட தவறுகள் செய்துள்ளார். இந்தத் தகவல் இதழியல்துறைத் தலைவர் பேராசிரியை ஜெனிபாவுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை பணியிலிருந்து நீக்கினார் ஜெனிபா. இவருக்குப் பதிலாக இரண்டு விரிவுரையாளரைக் கடந்த வியாழன் அன்று நியமித்துள்ளார் ஜெனிபா.

இதனால் கோபத்திலிருந்த ஜோதிமுருகன் இன்று காலை பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ளார். பேராசிரியை ஜெனிபா அறைக்குச் சென்ற ஜோதிமுருகன், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். அறையிலேயே இருந்துகொண்டு ஜெனிபா கத்துவதை ரசித்துள்ளார். தகவல் அறிந்து மாணவர்கள் ஜோதிமுருகனைத் தாக்கியதோடு, நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். வேலை கிடைக்காத கோபத்தில் பேராசிரியை ஜெனிபாவை ஜோதிமுருகன் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. வேலை பறிபோனதால் மனைவியும் அவரை மதிக்காமல் இருந்துள்ளார். இந்த விரக்தியால் ஜோதிமுருகன் இவ்வாறு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது ஜோதிமுருகன் மனநோயால் சற்றுப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

Topics

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories