சென்னை:
சென்னை, பூந்தமல்லி சிறப்பு தனி சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், ப்ளூடூத் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் சிறப்பு தனி சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், ப்ளூடூத், வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அபுதாகீர், சமி உல்லா ஆகியோரிடம் இருந்து இத்தகைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறைக்குள் இருந்தாலும், இவர்களிடம் பல பொருள்கள் தாராளமாக நடமாடுகின்றன என்று புகார்கள் எழுந்துள்ளன.